செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டிணைவு
செவ்வாய் கிரகணத்தில் ஆராய்ச்சி நடத்தும் நோக்கில் அமெரிக்காவும், இந்தியாவும் தனித்தனியான விண்கலங்களை அனுப்பியுள்ளனர்.
இந்த இரண்டு விண்கலங்களும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு அவற்றின் செயல்பாடுகளை நாசா மற்றும் இஸ்ரோ அமைப்புகள் ஒருங்கிணைக்கும்.
இப்போதைய முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை எடுத்துச்செல்வதுதான் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் விண்கலத்தைப் போன்று இல்லாமல், மிகவும் குறைந்த செலவில், சிறிய கருவிகளை மட்டும் மங்கள்யான் செவ்வாய் கிரகத்துக்கு எடுத்துச்செல்கிறது.
மேவன் விண்கலம் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் செலவிலும், மங்கள்யான் விண்கலம் 450 கோடி ரூபா செலவிலும் அனுப்பப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மேவன் விண்கலத்தில் 8 அறிவியல் கருவிகள் இருக்கும்போது, மங்கள்யான் விண்கலத்தில் 5 அறிவியல் கருவிகள் மட்டுமே உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் இதுவரை ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களை அறிந்துகொள்ள, அதன் வளிமண்டல மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக மேவன் விண்கலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து திங்கள்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதா என்பதையும், கனிம வளம் தொடர்பாகவும் ஆய்வு நடத்த மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5-ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியைச் சுற்றி வரும் இந்த விண்கலம் டிசம்பர் 1-ம் திகதி செவ்வாயை நோக்கிய பாதையில் செலுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment