Wednesday 30 January 2013

மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்

மத கடவுளர் படங்கள் சிலைகளை அகற்றவேண்டும்
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருக்கும் அனைத்து மத கடவுளர் படங்கள் சிலைகளை தமிழக அரசின் ஆணைப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும் உடனடியாக அகற்றவேண்டும், குருந்தன்கோடு பூங்காவை இடித்து கட்டிய கோவிலின் அலங்கார வளைவினை அகற்றி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பூங்கா நிலத்தை மீட்க வேண்டும், அதுபோல தேரூரில் இருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தின் பின்புறம் கட்டிய கோவிலையும், கோவில் மண்டபத்தினையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் இருக்கும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன், வாழ்வுரிமை மக்கள் இயக்கத் தலைவர் வழக்குரைஞர் ஜோ. தமிழ்ச்செல்வன் தி.க. மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், ம. தயாளன், உ. சிவதாணு, எஸ். கே. அகமது, த. சுரேஷ், அய். மணிகண்டன், செ. ஆனந்த், நகர ச. நல்லபெருமாள், கவிஞர் எச். செய்க்முகமது, ச. ச. கருணாநிதி, செ. இரத்தினசாமி ஆகியோர் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ச.நாகராஜனைச் சந்தித்து மாவட்ட கழகம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...