Friday 18 December 2015

இலங்கையில் 2015ம் ஆண்டில் பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றது! பான் கீ மூன் தெரிவிப்பு

இலங்கையில் 2015ம் ஆண்டில் பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றது! பான் கீ மூன் தெரிவிப்பு


இலங்கையில் 2015ம் ஆண்டில் பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இயல்பற்ற சூழ்நிலையிலும் கூட அரசியல் நகர்வில் முன்னேற்றம், அமைதியான அதிகார மாற்றம் என்பன இலங்கையிலும் நைஜீரியாவிலும் இடம்பெற்றுள்ளன.
2015ம் வருடத்துக்கான இறுதி செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றும் போதே மூன் இதனைக் குறிப்பிட்டார்.
2015ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 70வது நிறைவுடன் காலநிலை தொடர்பான பிரச்சினைக்காக தீர்வு விடயமும் உள்ளடங்கியிருந்தது.
இந்தநிலையில் சர்வதேச சமாதானத்துக்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் செயற்படும் என்று பான் கீ மூன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...