நேபாள வான் குகைகள் (Sky Caves of Nepal)
நேபாளத்தின் வடமத்திய பகுதியிலுள்ள Mustang மாவட்டம், உலகின்
பெரும் அகழ்வராய்ச்சி மர்மங்களை உள்ளடக்கிய இடங்களில் ஒன்றாக
விளங்குகிறது. இமாலய மலைக்குள் மறைவாக அமைந்துள்ள இந்த மர்ம இடங்கள், காளி கந்தகி (Kali Gandaki) ஆற்றால் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இயற்கையான குகைகள் தவிர, மனிதரால் கட்டப்பட்ட பல சிறப்பான குகைகளும் உள்ளன. சில குகைகள் ஒரு பெரிய நுழைவாயில்துவாரத்தையும், மற்றவை
பல நுழைவாயில்துவாரங்களையும் கொண்டுள்ளன. பல நுழைவாயில்களைக் கொண்ட
குகைகள் எட்டு அல்லது ஒன்பது அடுக்குகளைக் கொண்டு செங்குத்தாகவும் உள்ளன.
சில குகைகள் செங்குத்தான பாறைகளிலும், சில குகைகள், பாறைகளைக் குடைந்தும் அமைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் முன்னாள் Mustang முடியாட்சிப் பகுதியில் மொத்தம் பத்தாயிரம் குகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இக்குகைகளை யார், எதற்காகக் குடைந்தனர்,
இவற்றுக்கு மக்கள் எவ்வாறு சென்றனர் என்பன போன்ற விவரங்கள் புதிராகவே
இருக்கின்றன. இவை குறித்த அனைத்துச் சான்றுகளும் அழிக்கப்பட்டுவிட்டதாகச்
சொல்லப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தமத வல்லுனர்கள் மற்றும்
புத்தமதக் கலைக்கு மையமாக விளங்கிய Mustang, பின்னர்
17ம் நூற்றாண்டில் இந்தியா உட்பட அதற்கு அருகிலிருந்த அரசுகள் அதை
ஆக்ரமிக்கத் தொடங்கின. இதற்குப் பின்னர் இப்பகுதி அனைவராலும் மறக்கப்பட்டு
பெரிய இமாலய மலைகளுக்குள் மறைவான இடமாக மாறியது. 1981ம் ஆண்டில்
இக்குகைகளுக்குச் செல்ல முயற்சித்த Pete Athans, “இவற்றில் பல குகைகளை அடைவது இயலாத காரியம். அதற்கு ஒருவர் பறவையாக மாற வேண்டும்” என்று சொல்லியுள்ளார்.
No comments:
Post a Comment