சிறிலங்கா மீது குவிக்கப்படும் பிரித்தானியாவின் பார்வை!
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் போன்ற விடயங்கள் குறித்து தொடர்ந்தும் பிரித்தானியா வலியுறுத்தும் என பிரித்தானியாவின் சால்டாரி நகரப் பிரபு வெலாஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு நடவடிக்ககைள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கனிசமானளவு சவால்களை எதிர்நோக்கி வருகிறது.
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் எவ்வாறான பிரதிநிதித்துவத்தை செய்வதென்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த போது நிலக்கண்ணி வெடி அகற்றுதல், அபிவிருத்தி, சிறுவர் போராளிகள் போன்ற விடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை பெரும் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு தெரிவுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் அமர்வை பிரித்தானியா பகிஸ்கரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை தெரிவுக்குழு ஆதரவு வழங்குவதாக பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிமொன் டன்ஸ்ஷேக் விடுத்துள்ளார்.
அதன்படி பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை தெரிவுக்குழு, அந்த நாட்டின் மூன்று பிரதான கட்சிகளின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கிறது.
இந்தக்குழு பிரித்தானியாவின் வெளியுறவு செயற்பாடுகள் நிதிகள் போன்ற விடயங்களை கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் இன்னும் பிரித்தானிய அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தவில்லை. சிறிலங்கா விடயத்தில் மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டும்.
எனவே நடைபெறவுள்ள மாநாட்டை பிரித்தானிய அரசாங்கம் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் வெளியுறவுக்குழு கோரியுள்ளதாக டன்ஸ்ஷேக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment