Saturday, 9 November 2013

வால்நட்சத்திரம் மோதி அழிந்த "டைனோசர்'

வால்நட்சத்திரம் மோதி அழிந்த "டைனோசர்'

சூரியனைச்சுற்றி "ரிங்கால்' போன்ற அமைப்பில் ஊர்ட்ஸ்(Oorts) என்ற மேகம் உள்ளது. இந்த மேகத்தில் உள்ள இலட்சக்கணக்கான வால் நட்சத்திரங்களில் சில, ஊர்ட்ஸ் மேகத்தில் இருந்து பிரிந்து வந்து, சூரியனைச்சுற்றி செல்லும். அவ்வாறு, சூரியனுக்கு அருகில் வரும்போது, அதிலுள்ள பனிமேகம் உருகி, சூரியக்காற்றால் ஒரு நீண்ட வால் போன்ற அமைப்பை பெறுகிறது. இந்த வாலின் நீளம் பல கோடி கி.மீ. வரை இருக்கும். இத்தகைய ஒரு வால் நட்சத்திரம்தான், இந்த நவம்பர் மாதம் முழுவதும் சூரியனைச் சுற்றும் பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகிறது. "இத்தகைய வால் நட்சத்திரத்தை விடியற்காலையில் வெறும் கண்ணால் பார்க்கலாம்' என, அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதன் ஒளி, நிலாவைப்போல 12 மடங்கு இருக்கும். வால் நட்சத்திரத்தின் வருகையால், பூமிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால், விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஏராளமான செயற்கைக் கோள்கள் பாதிக்கப்படலாம். அறுபத்தைந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன், ஒரு வால் நட்சத்திரம் பூமியின் மீது மோதியபோது, பூமி முழுவதும் 500 டிகிரி வெப்பநிலையில் நெருப்புப் பந்தாக மாறியுள்ளதாக, ஆய்வுகளின் மூலம் தெளிவாகி உள்ளது. அப்போது பூமியில் இருந்த டைனோசர் உட்பட பல உயிரினங்கள் அழிந்தன என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கேத்தி பொறியியல் கல்லூரியில், வால் நட்சத்திரம் குறித்து நடந்த சிறப்புக் கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட செயலாளர் ராஜூ இவ்வாறு பேசினார்.
நவம்பர் 11 அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தினகரன்

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...