சம்பங்கி பூ
பூஜைக்கு உகந்த சம்பங்கி பூ, மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது. சம்பங்கி பூ அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் பூ இதழ்களும், தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையன. அரை கிலோ தேங்காய் எண்ணெயில், 50
கிராம் சம்பங்கிப் பூவைப் போட்டு நன்கு காய்ச்சி இறக்க வேண்டும்.
காய்ச்சிய எண்ணெய்தான் சம்பங்கித் தைலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த
தைலத்தை உச்சி முதல் பாதம் வரை நன்றாக தேய்த்தால் உடல்வலி தீரும்.
சம்பங்கிப் பூவில் பவுடரும் தயாரிக்கலாம்.4 சம்பங்கி பூவுடன் ஒரு
தேக்கரண்டி ஒலிவ எண்ணெயைக் கலந்து அரைத்து சூடு பறக்க நெற்றிப் பகுதியில்
தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கிப் பூவைப்
போட்டு, பாதியாக சுண்டும் வரைக் காய்ச்சி, அந்தத் தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.
சம்பங்கி
பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களைச் சுற்றி பூசி 10
நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி
போன்ற பிரச்சனைகள் தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள்
பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் 2 சம்பங்கி பூவைப் போட்டு
ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர்
வீதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், உடல் தெம்பும், பலமும்
பெறும். 200 கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவைப் போட்டு
காய்ச்ச வேண்டும். இதில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால் மற்றும்
பாதத்தில் தடவி வந்தால், சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணெய் சேர்க்காமல், நன்றாக
ஆற வைத்து எலுமிச்சை சாறைக் கலந்து இரசத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி
குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இதைத் தினமும் காலை, மாலை
இரு வேலையும் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மென்மையாகும். சம்பங்கி இலையை
மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாத வலி நீங்கும்.
ஒரு கைப்பிடி சம்பங்கிப் பூவை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வந்தால், முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும்.
No comments:
Post a Comment