Friday, 8 November 2013

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை வர அனுமதி மறுப்பு

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை வர அனுமதி மறுப்பு

Source: Tamil CNN
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமை நிறுவனத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் இலங்கை வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவின் விசேட அறிக்கையாளர் கெப்ரியேலா கனுல் மற்றும் அதன் முதல் நிலை அறிக்கையாளர் பாரம் குமாரசுவாமி ஆகியோர் இந்த பிரதிநிதிகள் குழுவில் அடங்குகின்றனர்.
இந்த பிரதிநிதிகள் குழுவின் இலங்கை வருகையை வரவேற்பதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் தூதுவர் டொக்டர் கிறிஸ் நோனிஸ் பகிரங்கமாக தொலைக்காட்சி போட்டியில் உறுதியளித்திருந்தார்.
எனினும் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான விசா விண்ணப்பங்கள் உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பொதுநலவாயத்தின் உண்மையான மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி, சட்டத்துறை தொழிலில் ஈடுபடும் நபர்களின் சுதந்திரம் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவிருந்தது.
200க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும், இராஜதந்திரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முன்பதிவுகளை செய்திருந்தனர்.
சர்வதேச மற்றும் பொதுநலவாயத்தின் கடப்பாடுகள், மதிப்புகள் சட்டத் தொழிலின் சுதந்திரம் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் மீளாய்வுகள் தொடர்பில் இவர்கள் விவாதிக்கவிருந்தனர்.
எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாக 13 ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கத்தின் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமை நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருவதற்கு இரண்டாது முறையும் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக அந்த நிறுவனத்தின் இணைத் தலைவர் ஹேலேனா கென்னடி தெரிவித்தார்.
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் டொக்டர் நோனிஸ் எமது பிரதிநிதிகள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறியிருந்தார்.
2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு செல்ல தடையேற்படுத்தப்பட்டமை ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...