Friday, 8 November 2013

அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம் : அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல்

அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம் : அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல்

Source:Tamil CNN
அணு ஆயுத ஆபத்து இல் லாத உலகம் உருவாக வேண் டும் என்ற தனது இதயப்பூர்வ மான விருப்பத்தினை இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியுடனான சந்திப்பின் வாயிலாக உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியுள்ளார் கியூபப்புரட்சியின் மகத் தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ.
மேலும் அணிசேரா இயக் கம் இன்றும் முக்கியத்துவத்து டன் விளங்குகிறது என்றும், பூவுலகின் தெற்கு நாடுகள் அனைத்தும் இன்னும் நெருக்கமாக ஒத்துழைப்புடன் செயல் பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலை வர் டாக்டர் ஹமீது அன்சாரி பெரு மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பய ணம் மேற்கொண்டார். இந்த நாடுகளில் இந்திய கலாச் சாரத் திருவிழாக்களை அவர் தொடக்கி வைத்தார்.
தனது பயணத்தின் ஒருபகுதியாக கடந்த இரண்டு நாட்களாக கியூபா வில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அன்சாரி, கியூபாவின் மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோவையும் ஜனாதிபதி ரால்காஸ்ட்ரோவையும் சந்தித் தார்.பிடல் காஸ்ட்ரோவுட னான சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை.
எனினும், காஸ்ட்ரோவை சந்திக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் விருப்பத்தை அன்சாரி கியூப அரசுக்குத் தெரிவித்தார்.இதையடுத்து கடைசி நிமிடத்தில் பிடல் காஸ்ட்ரோவு னான சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டது.87 வயதாகும் உலகின் மகத்தான தலைவர்களில் ஒருவரான பிடல் காஸ்ட்ரோவுடன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடியது பற்றி, வியாழனன்று தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மிகுந்த ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் அன்சாரி தெரிவித்தார்.
தற்சமயம் நேரடி அரசியல் வாழ்வில் பிடல் காஸ்ட்ரோ ஈடுபடவில்லை என்ற போதி லும் என்றென்றும் கியூப
மக்களை ஆகர்சிக்கிற தலைவராகவே அவர் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன் என அன்சாரி தெரிவித்தார். இந்த உலகத்தில் பெரும் எண்ணிக்கையில் அணு ஆயு தங்கள் குவிந்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக எங்களது சந்திப்பை பயன்படுத்திக்கொண்டுள்ளார் பிடல் காஸ்ட்ரோ எனத்தெரிவித்த ஹமீது அன்சாரி, ஒரு சிறு அணு ஆயுத விபத்து கூட உலகத்தையே அழித்துவிடும் என்றும் அப்படிப்பட்ட விபத்து நிகழ்வதற்கு காத்துக் கொண்டே இருக்கிறது என்றும் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.
பெருமளவில் அணுஆயு தங்களைக் குவித்துள்ள அமெரிக்கா, ஒருமுறை தனது சொந்த மண்ணிலேயே தவறு தலாக ஒரு அணுகுண்டை போட்டுவிட்டது; நல்லவேளை யாக அது வெடிக்கவில்லை என்றும் காஸ்ட்ரோ நினைவு கூர்ந்ததை அன்சாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் அமெரிக் காவின் தீர்மானம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதா என்ற கேள்விக்கு பதி லளித்த அன்சாரி, ஐ.நா. சபை யில் கியூபாவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தே இந்தியா வாக்களித்துள்ளது என்றும், கியூபா மீதான தடைகள் ஐ.நா. விதித்த தடைகள் அல்ல; அமெரிக்கா விதித்த தடைகளே என்றும் குறிப்பிட்டார்.
இந்த விஷயத்தில் ஒட்டு மொத்த உலக நாடுகளும் கியூபா பக்கமே நிற்கின்றன என்றும், இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவுடன் நிற்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...