Monday, 11 November 2013

பொதுநலவாயத்தின் அடிப்படைத் தகமைகளை தகர்க்கும் சிறிலங்கா: அதிரடிக் கையேட்டினை வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசு

பொதுநலவாயத்தின் அடிப்படைத் தகமைகளை தகர்க்கும் சிறிலங்கா: அதிரடிக் கையேட்டினை வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசு

Source: Tamil CNN
பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும், நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கேயாடானது கீழ் வரும் விடயங்களை முன்வைக்கின்றது,
1). பொதுநலவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும், ஏற்க மறுத்து முரணியும், மீறியும் நடந்து கொள்கிறது.
2). பொதுநலவாயமந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை நையீரியா, சிம்பாவே, பாகிஸ்த்தான்,பிஜி என்பவை தொடர்பாக மீளாராய்வதால், சிறிலங்காவை பொதுநலவாயத்திலிருந்து நீக்கிவைக்க தேவையான தெளிவான முன்னுதாரணம் இங்கே ஏற்படுத்தப்பட்டிருப்பதை இந்தக் கையேடு அடையாளம் காண்கிறது.
3). மனித ஊரிமைகள், சனநாயகம், நீதி, ஊடகத்துறை போன்றவற்றின் உரிமை மீறள்களை விசாரிக்க வேண்டிய பொதுநலவாய மந்திரிகள் செயற்குழு அமைப்பே தனது தலைமையை எடுத்து நடத்த சிறிலங்காவுக்கு இடமளிப்பதால் போர்க்குற்றம், இனவழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றங்கள் புரிந்த சிறிலங்காவின் செயல்களை அது நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டதாகிறது.
4). சிறிலங்காவினன் அரசியல் அமைப்பின் 6ம் திருத்தத்தில் தெட்டத்தளிவாக காணப்படுவது போலவே வலிந்த தனமாக பேச்சு சுதந்திரத்தை முடக்கும் சிறிலங்கா அரசின் நிலைப்பாடானது பொதுநலவாயத்தின் அடிப்படை தகமைகளை தகர்ப்பதாகிறது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குறித்த கையேட்டினை தரவிறக்கம் செய்யலாம் அல்லது பார்வையிட்டுக் கொள்ளலாம்…
கையேட்டினை தரவிறக்கம் செய்ய அல்லது பார்வையிட…
tgte1

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...