ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் மீது தற்கொலைத் தாக்குதல் : 44 பேர் பலி
மாலத்தீவு அதிபர், முகமது வாகீத், பதவி காலம் முடிந்ததால் புதிய அதிபர் தேர்வாகும் முன்பே, பதவி விலகினார். மாலத்தீவில் மாமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தார்.
2008ல், நடந்த தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால், நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர் போலீஸ் புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வாகீத் 2012ல், அதிபர் பொறுப்பை ஏற்றார்.சென்ற செப்டம்பர் மாதம் 7ம் திகதி புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது.
முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாஜி அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான, அப்துல்லா யாமீன் உள்ளிட்டோர், அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.ஓட்டுகள் எண்ணப்பட்டதில் முகமது நஷீத் முன்னிலையில் இருந்தார். இருப்பினும், 50 சதவீத ஓட்டுகளை பெறாததால் செப்டம்பர் மாதம், 28ம் திகதி மறுதேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், முதற்கட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், முதற்கட்ட தேர்தலை, ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த மாதம், 19ம் திகதி, மறுதேர்தலை, மாலத்தீவு தேர்தல் ஆணையம், அறிவித்தது. ஆனால், 19ம்தேதி, வாக்காளர் பட்டியலை இரண்டு வேட்பாளர்கள், அங்கீகரிக்காததால், தேர்தலை நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இந்நிலையில் கடந்த 9ம்திகதி, மறுதேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிந்ததும் ஓட்டு எண்ணப்பட்டது.
முகமது நஷீத், 46.4 சதவீதம் ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிபர் பதவியை பெறுவதற்கு, 50 சதவீத ஓட்டுகளை எந்த வேட்பாளரும் பெறாத காரணத்தால் வரும், 16ம்திகதி மறுதேர்தல் நடத்த, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மாலத்தீவில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாததால் அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது.
இதற்காக அந்நாட்டை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதாக இந்த அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயற்குழு, அறிவித்தது. அதிபர் பதவிக்கான காலம் முடியும் முன்பே புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் மாலத்தீவு அரசு காலம் கடத்துவதாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவி”த்தன. இதற்கிடையே மாலத்தீவு அதிபராக இருந்த வாகீத்தின் பதவி காலம் நேற்றோடு முடிந்தது.
இதையடுத்து, அவர், பதவியிலிருந்து விலகினார். நேற்று முன்தினம் இரவு “டிவி’ யில் உரையாற்றிய பின், வாகீத், மாலத்தீவிலிருந்து வெளியேறி, வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது. புதிய அதிபர் பதவி ஏற்கும் முன்பே, வாகீத் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment