காமன்வெல்த் மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு: நவம்பர் 12 இல் தமிழகத்தில் முழு கடையடைப்பு
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 12 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த மதிமுக உள்ளிட்ட 21 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 12 ஆம் தேதியன்று தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் த.வெள்ளையன் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது 21 அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட 21 அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை அழைப்பு விடுத்துள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், தமிழக மக்களும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment