Tuesday 22 June 2021

கோவிட்-19 தடுப்பூசிகள் நன்கொடைகள் விரைவில் தேவை

 உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் Tedros Adhanom Ghebreyesus


ஜி 7 நாடுகள் அமைப்பு, ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தற்போது உலக அளவில் மக்களின் வாழ்வை காப்பாற்றுவதற்கு, இலட்சக்கணக்கான கோவிட்-19 தடுப்பூசிகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன என்று, WHO எனப்படும், ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டின் மத்திய பகுதிக்குள், அனைத்து நாடுகளின் மக்களுள் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசிகள் வழங்கும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் திட்டத்திற்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்று, அந்நிறுவனத் தலைவர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், ஜூன் 17, இவ்வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பணக்கார நாடுகளும், மருந்து நிறுவனங்களும், கூடுதலாக தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்கும், அவற்றைத் தயாரிப்பதற்கும் அடுத்த ஆண்டுவரை காத்திருந்தால், இப்போது இறந்துகொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவது கடினம் என்றும், Tedros அவர்கள் அறிவித்தார்.

வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது பத்து விழுக்காட்டினருக்கும், 2021ம் ஆண்டு முடிவதற்குள், குறைந்தது நாற்பது விழுக்காட்டினருக்கும்,  2022ம் ஆண்டின் பாதிக்குள் 70 விழுக்காட்டினருக்கும் தடுப்பூசிகள் வழங்க, உலக நலவாழ்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும், Tedros அவர்கள் கூறினார்.

இதற்கிடையே, ஜி 7 நாடுகள் அமைப்பு, ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக, ஜி 7 உச்சிமாநாட்டில் உறுதியளித்துள்ளது. பிரிட்டன், அடுத்த ஆண்டுக்குள் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகளை நன்கொடையாக வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. (UN)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...