லண்டனில் திரையிடப்படவுள்ள A Gun and A Ring திரைப்படம்
புலம்பெயர் தமிழர்களின் வலிகளை உணர்வு ரீதியாக வெளிக்காட்டும் “A Gun and A Ring” திரைப்படம் எதிர்வரும் 22ம் திகதி லண்டனில் திரையிடப்படவுள்ளது.
பல உலக மேடைகளில் விருதுகளையும், பாராட்டையும் தட்டிச் சென்ற இப்படம் லண்டன் Cineworld Wembley அரங்கில் Echo8 Productions-ன் ஏற்பாட்டில் வருகின்ற 22ம் திகதி மாலை 6 மணிக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது.
இத்திரையிடல் மிகச்சிறப்பாக ஒழுங்கமைக்கடிட்டு கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ரிக்கட்டுக்கள் விற்பனையாகிக் கொண்டுள்ளது, ஒரு ரிக்கட் விலை 12 பவுன்ஸ் ஆகும்.
No comments:
Post a Comment