Thursday, 6 February 2014

அவர் ‘பேத்தாவன்’ அல்ல

அவர் ‘பேத்தாவன்’ அல்ல

Source: Tamil CNN
 121025133356_beethoven__304x171_getty_nocredit
புகழ்பெற்ற ஜெர்மானிய செவ்விசைக் கலைஞர் பேத்தாவனுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்ட , ஜப்பானைச் சேர்ந்த, கேட்கும் திறனற்ற ஒரு இசைக் கலைஞர், தான் இயற்றிய மிகப் பிரபலமான செவ்விசை ஆக்கங்களில் சில , உண்மையில் வேறு ஒருவரால் இயற்றப்பட்டவை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
மமோரு சமுராகோச்சி என்ற இந்த இசைக்கலைஞர், கடந்த சுமார் 20 ஆண்டுகளாக மற்றொரு இசைக் கலைஞரின் ஆக்கங்களைப் பயன்படுத்தி வந்ததாக இப்போது கூறுகிறார்.அந்த இசைக் கலைஞர் யார் என்னும் தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
தனது கேட்கும் திறன் மோசமடைந்தபோது,முதலில் இவரது உதவியை , மமோரு நாடினார்.
அவர் பின்னர் முழுமையாக கேட்கும் திறனை இழந்துவிட்டாலும், தொடந்து தனது பெயரில் இசையாக்கங்களை வழங்கிக்கொண்டே இருந்தார்.
தனது வழக்குரைஞர் மூலமாக விடுத்த அறிக்கை ஒன்றில், மமோரு சமுராகோச்சி, தனது இசை விசிறிகளுக்கு இழைத்த துரோகத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...