Saturday, 1 February 2014

எட்வர்ட் ஸ்னோடனின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது

எட்வர்ட் ஸ்னோடனின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது

Source: Tamil CNN
 Edward-Snowden
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் அந்நாட்டின் முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடனை அமெரிக்க அரசு தேடி வருகிறது. தற்போது, ஸ்னோடன் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், எட்வர்ட் ஸ்னோடனின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. நார்வே நாட்டு சட்ட வல்லுனர்களான வெகர்ட் சோல்ஜெல், ஸ்னோர் வெலன் ஆகியோர் பரிந்துரைத்தனர். “ஸ்னோடனின் செயல்பாடுகள், அமைதியான உலகத்திற்கு உதவி புரிகிறது” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நோபல் பரிசுக்கான ஐந்து நபர் ஆய்வுக் குழுவிடம் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய நாடாளுமன்றங்கள், அரசுகள், பல்கலைகழக பேராசிரியர்கள், முந்தைய ஆண்டுகளில் பரிசு பெற்றவர்கள் ஆகியோர் வரும் பிப்ரவரி 1ஆம் திகதிக்கு முன்பாக அவர்களது பரிந்துரைகளை அளிக்க வேண்டும். ஆய்வுக் குழு உறுப்பினர்கள் அவர்களது பரிந்துரைகளை முதல் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...