Friday, 14 February 2014

காற்று மாசுப்படுவதை தடுக்க 1.6 பில்லியன் யுவான் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சீனா

காற்று மாசுப்படுவதை தடுக்க 1.6 பில்லியன் யுவான் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சீனா

Source: Tamil CNN
 5588f0ac-d1f6-4dc8-95ab-eed6d1e4d4cf_S_secvpf
தொழில்துறையிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் மேற்கத்திய நாடுகளுடன் போட்டிபோட்டு வளர்ச்சி நிலையில் உள்ள சீனாவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது.
அந்நாட்டின் பல நகரங்களிலும் அபாய அளவைக் கடந்து புகைப்பனி காணப்படுவது அரசுக்கு பெரிய சவாலாக விளங்கி வருகின்றது.
நாட்டின் காற்று, நீர், மண் போன்ற அனைத்து வளங்களையும் மாசுபடுத்தி உருவாகியுள்ள பொருளாதார முன்னேற்றம் நகர மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பது சீனாவின் உறுதித்தன்மை மிக்க தலைவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது.
நிலைமையை சீர்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்துவரும் அரசு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தலைநகர் பீஜிங்கில் உள்ள மாசு புகையை வெளிப்படுத்தும் 300 தொழிற்சாலைகளை மூடவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சீனாவை சுத்தம் செய்யும் ஏராளமான திட்டங்களையும், அறிக்கைகளையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தீவிரமான பிரச்சினைகளில் நீதிமன்றம் மரண தனடனைத் தீர்ப்பு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் பிரதமர் லீ கிகியாங் முக்கியப் பகுதிகளில் காற்று மாசுபாடினை நீக்கப் போராடுவதற்கு மானியங்களை விட வெகுமதிகளை வழங்க 10 பில்லியன் யுவான் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா ஏற்கனவே முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. எனினும், நீண்டகாலப் பிரச்சினை என்பதால் இதற்கான நிரந்தரத் தீர்வும் தேவைப்படுவதாக அரசு அறிவிக்கின்றது.
இருந்தபோதிலும்,மாசு தொழிற்சாலைகளிலிருந்து பெறும் அதிக பணத்தை அமலாக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதால் உள்ளூர் அளவில் அரசின் திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படுவதில்லை என்றே அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...