Friday, 3 May 2013

பலா

பலா

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். இது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் அதிகமாக வளர்கிறது. தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும்.
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.
அடிக்கடி நோய் தாக்கி துன்புறுகிறவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் நலம் பெறும். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதுபற்றிய ஆய்வு நடந்து வருகிறது.
கண் பார்வைக்கு உதவும் உயிர்ச்சத்து ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக சக்தியைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், இரத்தத்தை விருத்தி செய்யும்.

ஆதாரம் தினகரன், விக்கிபீடியா
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...