Monday, 6 May 2013

இந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.சி. பஸ் நிறுத்தம் கும்பகோணத்தில் திறப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.சி. பஸ் நிறுத்தம் கும்பகோணத்தில் திறப்பு!

Source: Tamil CNN
இந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.சி. வசதி கொண்ட பயணிகள் பஸ் நிறுத்தம் கும்பகோணத்தில் திறக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நான்கு ரோட்டில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 18 லட்சத்தில் ஏ.சி. வசதி கொண்ட பயணிகள் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. அமைச்சர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.
இந்த பஸ் நிறுத்தத்தில் நடக்கும் அனைத்தையும் நகராட்சியில் இருந்தபடி கண்காணிக்கும்
வகையில் கேமரா, 1 ரூபாய் காசு போட்டு பேசும் தொலைபேசி வசதி, கம்ப்யூட்டர் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பிரிண்ட் எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த பஸ் நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்னர்.
kumbakonam01
kumbakonam02

No comments:

Post a Comment