Wednesday 30 September 2020

இந்தியாவில் கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தோர் 50 இலட்சம்

 இந்தியாவில் கோவிட் சோதனைக்காக காத்திருப்போரின் வரிசை


உலகில், கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60 இலட்சத்து 74 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 50 இலட்சத்து 16 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 2 விழுக்காட்டினரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 7 கோடியே 19 இலட்சத்து 67 ஆயிரத்து 230 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இத்திங்கள் இந்திய நேரம் நண்பகல் ஒருமணி வரையுள்ள நிலவரப்படி, உலகில் கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர், 2 கோடியே 46 இலட்சத்து 42 ஆயிரத்து 17 பேர் இந்நோயிலிருந்து மீண்டுள்ளனர். (Dinamalar)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...