Wednesday, 30 September 2020

அவரவர் பார்வையில் விவிலிய விளக்கம்

 அவரவர் பார்வையில் விவிலியத்தில் காணப்படும் வேறுபட்ட விளக்கங்கள்


விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெரும் ஆசீர், அதே நேரம்... மிகப்பெரிய சவாலும் கூட!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கார் ஓட்டுவதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த இளையமகன், முதல்முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று, வீட்டுக்கு வந்தார். அவருடைய அப்பா, இறைபக்தியுள்ள விவிலியப்போதகர். மகன், அப்பாவிடம் சென்று, வீட்டிலுள்ள காரை தான் ஓட்ட விழைவதாகக் கூறியபோது, அப்பா அவரிடம், "சரி மகனே, நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நீ உன் பாடங்களில் இன்னும் அதிக மதிப்பெண்கள் வாங்கு; தினமும் விவிலியத்தை வாசி; உன் தலைமுடியை வெட்டிவிடு. அதன்பின், கார் ஓட்ட உன்னை அனுமதிக்கிறேன்" என்று கூறினார்.

ஒரு மாதம் சென்று, மகன் திரும்பிவந்தபோது, அப்பா அவரிடம், "மகனே, நீ அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாய்; தினமும் விவிலியம் வாசிக்கிறாய்; மிக்க மகிழ்ச்சி. ஆனால், உன் தலைமுடியை நீ இன்னும் வெட்டவில்லையே" என்று கூறினார்.

உடனே, மகன் அப்பாவிடம், "அப்பா, நான் விவிலியத்தை வாசித்தபோது, ஒன்றை கண்டுபிடித்தேன். விவிலியத்தில், சிம்சோன் நீளமான முடி வைத்திருந்தார். நோவா, மோசே, ஏன்... இயேசுவும் நீளமான முடி வைத்திருந்தனரே!" என்று பெருமையாகக் கூறினார். அப்பா மகனிடம், "நீ சொல்வது சரிதான், மகனே. ஆனால், நீ சொன்ன இவர்கள் அனைவரும், போகும் இடத்திற்கெல்லாம் நடந்தே சென்றனர்!" என்று பதிலளித்தார்.

விவிலியத்தின் பக்கங்களில், அவரவர், தங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பது, நமக்கு முன் இருக்கும் பெரும் ஆசீர், அதே நேரம்... மிகப்பெரிய சவாலும் கூட!

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...