Sunday, 16 March 2014

சர்வதேச விசாரணைக்கு தயாராகும் அமெரிக்கா

சர்வதேச விசாரணைக்கு தயாராகும் அமெரிக்கா

Source: Tamil CNN
 american-flag-2a
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 26 ம் திகதி அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அவ்வாறான விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டால் அதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கும் என இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பக்கசார்பான முறையில் செயற்பட்டு வருவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஞாயிறு திவயின குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி அமெரிக்காவின் தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் நவநீதம்பிள்ளை உரையாற்ற உள்ளதுடன் அதன் பின்னர் அமெரிக்க தூதுவர் பீட்டர் மியூரல் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த 3 ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மனித உரிமை ஆணையாளர் நியமிக்கும் அந்த ஆணைக்குழு இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்காது எனவும் அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறின.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். அதற்கு முன்னர் பொய்யான அறிக்கைகள் மூலம் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது எனக் கூறி இலங்கையை சிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் திவயின கூறியுள்ளது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...