இரட்டை தலையுடன் பிறந்த பெண் குழந்தை
Source; Tamil CNNஅரியானா மாநிலம் சோனாபட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஊர்மிளா சர்மா(வயது28) எனபவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. ஆனால் குழந்தைகளுக்கு இரட்டைதலைகளும் ஒரு உடலும் உள்ளது .
இது குறித்து மருத்துவமனையின் டாக்டர் ஆஷிஷ் ஷிகல் கூறியதாவது :-
இரட்டை தலை உள்ள குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என எதிர்பார்க்க முடியாது ஆனால் குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.ஒரு உடல் மற்றும் அனைத்து முக்கிய உடல் உறுப்புகளுடன் 2 தலைகள் இணைந்து உள்ளது. அதனால் அதை பிரிப்பது என்பது முடியாத காரியம்.
ஒரு “உன்னிப்பாக மற்றும் சவாலான” அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கு ‘உயிர்களை காப்பாற்ற முடியும், குழந்தைகள் உயிரோடு வைத்து இருப்பது ஒரு கடுமையான சவாலான காரியம். என கூறினார்.
இரட்டை குழந்தைகள் தறபோது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்.வைக்கப்பட்டு உள்ளனர். சர்மிளா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment