சீன விமான நிலையத்தில் பயங்கர வன்முறை: சூறையாடிய பயணிகள்
சீனாவில் விமானம் தாமதமான ஆத்திரத்தில் பயணிகள் விமான நிலைத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சீனாவில் சந்திரன் புத்தாண்டு மிகச்சிறப்பாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் ஊர்களுக்கு நேற்று முதல் திரும்ப தொடங்கினர். அதனால் விமான நிலையங்களில் பெருங்கூட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஹெனான் மாநிலத் தலைநகர் ஷெங்ஷோவூர் என்ற நகரில் உள்ள விமான நிலையத்தில் கடும்பனி காரணமாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகளிடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
விமான நிலைய அதிகாரிகளின் பதில் பயணிகளுக்கு திருப்தி அளிக்காததால் பயணிகள் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டனர். ஒரு கட்டத்தில் விமான நிலையத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். மேலும் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் புகுந்த பயணிகள் அந்த ஓட்டலில் இருந்த டேபிள், சேர், பாத்திரங்கள் ஆகியவற்றை தூக்கி போட்டு உடைத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment