சென்னையில் சிகப்பு விளக்கு பகுதி: பாலியல் தொழிலாளர் கோரிக்கை
சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தாம் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் 2,300 உறுப்பினர்களைக் கொண்ட பாலியல் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் ஏற்கனவே மனுக்களை அனுப்பியுள்ளதாக இந்த அமைப்பு கூறுகிறது. பாலியல் தொழிலாளர்கள் தொழில் நடத்தவென தனியாக சிகப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஏற்படுத்தாமல் இருக்கும் ஒரே இந்தியப் பெருநகரம் சென்னைதான்.
மும்பைக்கு காமத்திப்புரா, கொல்கத்தாவுக்கு சோனாகாச்சி என பாலியல் தொழிலுழுக்கு என்ற சிகப்பு விளக்கு பகுதிகள் உள்ளன.
அவ்வாறான இடம் சென்னையில் இல்லாததால், தாங்கள் சொல்லொனா கஷ்டங்களுக்கு ஆளாவதாக பாலியல் தொழிலாளிகள் கூறுகின்றனர். பொலிசாரும், ரவுடிகளும் தங்களிடம் இருந்து பணம் புடுங்குகிறார்கள் என அவர்கள் குமுறுகின்றனர்.
இது ஒரு மனித உரிமைப் பிரச்சினை என அவர்கள் வாதிடுகின்றனர். இந்திரா முன்மாதிரிப் பெண் கல்வியாளர்கள் சங்கமான இஃப்பெக்கின் செயலரான கே.கலைவாணி கூறினார். மும்பை கொல்கத்தா போன்ற ஊர்களில் சிகப்பு விளக்கு பகுதியிலேயே பாலியல் தொழிலாளிகள் வசிக்கும் நிலை இருந்துவருகிறது
ஆனால் சென்னையின் பாலியல் தொழிலாளிகளோ, தாங்கள் வசிக்கும் இடமாக அல்லாமல் தொழில் செய்வதற்கு மட்டுமான இடமாக ஒரு இடம் வரையறுக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.
சென்னையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகள் இருப்பதாகவும், மும்பை கொல்கத்தா போலன்றின் சென்னையில் பாலியல் தொழில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக திருட்டுத்தனமாகவே நடப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு முழுக்கவும் பார்க்க 1 லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு பலவந்தமாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுவதைத் தடுக்க இஃப்பெக் முயன்று வருகிறது.
அவ்வாறாக கொண்டுவரப்பட்ட பெண்கள், சிறுமிகள் 28 பேரை கடந்த ஒரு வருடத்தில் தாம் காப்பாற்றி அவரவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக கலைவாணி தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலுக்கு என இடம் ஒதுக்கினால் இத்தொழிலில் பாலியல் வன்முறை பெருமளவில் குறையும் என்று அவர் வாதிடுகிறார்.
No comments:
Post a Comment