Thursday, 13 February 2014

ஜெனீவாவில் நீதி நியாயம் கிடைக்குமென தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்: நோர்வேத் தூதரிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு

ஜெனீவாவில் நீதி நியாயம் கிடைக்குமென தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்: நோர்வேத் தூதரிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு

Source: Tamil CNN
 thomas_norve
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரையே தமிழ் மக்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளதாகவும் இதிலிருந்தே தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்குமென நம்புவதாகவும் யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை நோர்வேத் தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றுக் காலை விஐயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் தூதுவர் நேற்று மாலை யாழ் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் பின்னர் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரின் பின்னரான தற்போதைய நிலைமைகளை அறிந்த கொள்ளும் வகையிலேயே நோர்வே தூதுவரின் சந்திப்பு அமைந்திருந்தது. அத்தோடு தற்போதைய மாகாண சபை மற்றும் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தனர்.
இதன் போது வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது. இதன் செயற்பாடுகள் மக்களுக்குத் திருப்தியானதாக அமைகின்றதா உள்ளிட்ட பல கேள்விகளை மாகாண சபை தொடர்பாக கேட்டிருந்தனர்.
அதாவது இங்கு அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே முறுகல் நிலை தான் இருக்கின்றது. மேலும் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதால் மக்களுக்கான பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியாத நிலை இருக்கின்றது.
இவ்வாறு அரசாங்கம் முரண்படும் வகையில் செயற்படுவதால் கூட்டமைப்பினரும் மாகாண சபையினூடாக அரசிற்கு கோபமுட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனைத் தான் அரசாங்கம் விருமபுகின்றது.
இந்நிலையில் இன்று காலை (நேற்று) வடக்கு முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர்.
இதன் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதே வேளை வெளிநாடுகளும் இதற்கு உதவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதே கருத்தினை முன்வைத்து நோர்வேயும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு உதவ வேண்டுமென நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதே வேளையில் இங்குள்ள மக்கள் தற்போது எதனை விரும்புகின்றனர் என்றும் எதிர்பார்ப்புக்கள் என்ன என்றும் வினவியிருந்தனர். இவ்வாறு நம்புவதாலோ அல்லது எதிர்பார்ப்பதாலோ என்ன பயன் என்றும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு நான் பதிலளிக்கையில்,
இங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும். இத்தகைய விசாரணைகள் இலங்கையில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் விசாரிக்கப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர். இதனாலேயே ஜெனிவாவை அதிகம் எதிர்பார்த்திருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அத்தோடு இங்கு காணாமல் போனவர்களின் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் மற்றும் இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலைக் கொண்டு வரும் வகையிலையே ஜெனிவாவை எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலமாகவே நீதியும் நியாயமும் கிடைப்பதுடன் மனத் திருப்தியும் ஏற்படுமென்றும் தெரிவித்திருக்கின்றேன்.
இதே வேளையில் இங்கு போர் முடிவடைந்த ஐந்து வருடங்கள் ஆகவுள்ள நிலையில் யாழில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை மற்றும் போதைக் குடிவகைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் என்பன அதிகரித்து வருகின்றது.
போரினால் ஏற்பட்ட காயங்களே இதுவெனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனால் இங்குள்ள பெரியவர்கள் பலரும் கவலையடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.
IMG_1750
IMG_1755
IMG_1767

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...