Friday, 14 February 2014

சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் செயலிழந்தது

சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் செயலிழந்தது

Source: Tamil CNN
 1904706135Untitled-1
சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புதிய முயற்சியாக சந்திரனுக்கு ‘ஜாட் ரேபிட்’ (யூது) என்ற விண்கலத்தை அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் சென்று தரை இறங்கியது.
இதன் மூலம் சந்திரனில் விண்கலத்தை சேதம் இன்றி தரையிறக்கிய 3–வது நாடு என்ற பெருமையை சீனா அடைந்தது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளே விண்கலத்தை தரை இறக்கி இருந்தன.
நிலவின் மேற்பரப்பு மற்றும் அங்கு இருக்கும் இயற்கை வளங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வுக்கலன் அனுப்பப்பட்டது.
சந்திரனில் தரை இறங்கிய ஆய்வுக்கலன் சுமார் 9 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்று அந்த காட்சிகள் கொண்ட படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது.
இந்தநிலையில், ஆய்வுக்கலனில் இயந்திர கட்டுப்பாட்டில் கோளாறு ஏற்பட்டதால் சரியாக இயங்கவில்லை. முற்றிலும் செயலிழந்து விட்டதால் ஆய்வுக்கலனை சரி செய்ய முடியாது என சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...