இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்குமாறு கனடிய தமிழ் காங்கிரஸ் கோரிக்கை
சிறிலங்கா தனது 66-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் சிறிலங்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கைத்தீவில் வாழும் தழிர்கள் மத்தியில் சமாதானம் நீதி சமத்துவம் போன்றனவற்றை நிலைநாட்ட சர்வதேச சமூகங்களின் ஆதரவை வேண்டுகின்றனர்.
எதிர்வரும் மார்ச் 2014ல் ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் மகாநாட்டில் ஒரு அர்த்தமுள்ள தீர்மானம் நிறைவேற்றப்படுமென உலகம் பூராகவும் வாழும் தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
ஒன்று போர்க்காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் சம்பந்தமாக சர்வதேச சுயாதீன விசாரனை நடத்த உத்தரவிடல், யுத்த இறுதிக்கால கட்டங்களின் போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் இனப்படுகொலைகள்.
தமிழர்களுக்கு எதிரான பாரபட்சம் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. 1948-பிப்ரவரி 4-ந்திகதி சிறிலங்காவிற்கு பிரிட்டிஷ் காரரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. பெரும்பான்மை சிங்கள அரசாங்கம் சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும், புத்தசமயத்தை உத்தியோகபூர்வ சமயமாகவும் பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்ட ஆரம்பித்தது.
திட்டமிட்ட இந்த பாரபட்சம் பல வழிகளிலும் தொடர்ந்து விரிவடைய ஆரம்பித்தது. தமிழர்களின் வேலைத்தளங்கள், கல்வி வாய்ப்புக்கள், நில தீர்வைகள் போன்ற சகல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தின.
தமிழர்களுக்கான வன்முறை 50ல் இருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று மிக குறிப்பிடத்தக்க வகையில் 1983-ல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் அளவிற்கு தொடர்ந்தது. 1983 யூலை மாதம் இடம்பெற்ற சம்பவம் தமிழர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி உலகின் பல பாகங்களுக்கும் வெளியேற தொடங்கிய ஆண்டாக குறிக்கபட்டது.
பின்னர் 2009 மே மாதம் இடம் பெற்ற இறுதி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஐக்கிய நாடுகளின் கணிப்பின் படி கிட்டத்தட்ட 40,000 தொடக்கட் 70,000 வரையிலான அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
2013 நவம்பர் மாதம் இடம்பெற்ற கொமன்வெல்த்தில் கனடிய அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டிற்கு கனடிய தமிழர் காங்கிரஸ் நன்றி தெரிவிக்கும் வேளையில் அவர்கள் இலங்கைக்கு எதிராக நிதி மற்றும் இராஜதந்திர தடைகள் விதிப்பது சம்பந்தமாக உறுதியான நடவடிக்கை எடுக்கும் படி கனடிய அரசாங்கத்தை கேட்டுகொண்டுள்ளனர்.
மே 2009 ல் பாகுபாடற்ற கனடிய அரசாங்க FAAE கமிட்டியினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரை 4-ன் படி சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து யுத்தத்தின்போது இரு கட்சிகளின் விசாரனை முயற்சிகள் தோல்வி என்றால் தடைகள் கருதப்படவேண்டும்.
“ இந்த சிறப்பு கூறுகள் புலன்விசாரனை செய்யப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபட வேண்டும் 66 வருட பாரபட்சமான நடைமுறைகள் அமைதியான ஒர அரசியல் தீர்வு மூலம் திருத்தப்படவேண்டும்” டேவிட் பூபாலபிள்ளை. கனடிய தமிழ் காங்கிரஸ் தேசிய பேச்சாளர் கூறியுள்ளார்.
“ அடுத்த மாதம் ஜெனிவாவில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கின்றோம் அத்துடன் விசாரனை ஆணைக்குழு அமைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.” பூபாலபிள்ளை.
No comments:
Post a Comment