Friday, 14 February 2014

திருகோணமலையிலும் மனிதப் புதைகுழியால் பெரும் பரபரப்பு! தமிழ் சி.என்.என் இன் விசேட ரிப்போர்ட்

திருகோணமலையிலும் மனிதப் புதைகுழியால் பெரும் பரபரப்பு! தமிழ் சி.என்.என் இன் விசேட ரிப்போர்ட்

Source: Tamil CNN
 திருகோணமலை நகரசபைக் கட்டடத்திற்கு அருகில் மக்கேசர் விளையாட்டு மைதானத்துக்கு பின் புறம் கிணறு வெட்டும் போது எலும்புக்கூடுகள் சில நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்..
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்ல அனுமதிக்க வில்லை எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் திருகோணமலை நகர சபை தலைவர் கே.செல்வராசா மற்றும் உறுப்பினர்கள் மனித புதைகுழியை பார்வையிட சென்றபோது அவர்களும் அனுமதிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது புதைகுழியில் காணப்பட்டது மாடுகளின் எச்சங்கள் என கூறப்படும் வேளை ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலத்த சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜா சம்பவ இடத்துக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. எதிர் வரும் திங்கள்கிழமை வரும் வரை அப்பகுதிகளுக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதிக்க வேண்டாம் என கூறியதாக திருகோணமலைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் பெரேரா செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலும் தோண்டத் தோண்ட மனிதப் புதைகுழிகள் ஏராளமாக மீட்க்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
(தமிழ் சி.என்.என் இன் சிறப்புச் செய்தியாளர் – கிழக்கின் விடிவெள்ளி)
trinco_skelton
trinco_skelton (1)
trinco_skelton (2)
trinco_skelton (3)
trinco_skelton (4)
trinco_skelton (5)
trinco_skelton (6)
trinco_skelton (7)
trinco_skelton (8)

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...