சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 4 மணிநேரம் தொடர்ந்து ஆடவைக்கப்பட்ட சிறுமி :விமர்சனங்கள் குவிந்தன
சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது புகழ்பெற்ற நடன கலைஞர் ஒருவரின் உறவினரான 15 வயது சிறுமியை தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு ஆடவைத்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று இரவு நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சீனாவின் புகழ்பெற்ற நடன நட்சத்திரமான யங் லிபிங்கின் 15 வயது உறவினரான கைகி புத்தாண்டு நடனத்தை மேடையில் ஆடினார்.
மேடையில் ஆடிய அச்சிறுமி, கடந்து செல்லும் நேரத்தையும், பருவ நிலை மாற்றங்களையும் குறிக்கும் விதமான நடனம் ஒன்றினை நான்கு மணி நேரம் இடைவிடாது சுழன்றபடி நடனமாடினார். இந்த புது வருட நிகழ்ச்சிகளை மக்கள் நேரடி நிகழ்ச்சிகளாக மட்டுமின்றி தொலைக்காட்சி மூலமாகவும் கண்டு ரசிக்கின்றனர். இந்த ஆண்டும் 704 மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த சிறுமியை இடைவிடாது நான்கு மணி நேரத்திற்கு சுழலவிட்டது குறித்து இணையதளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நபர் ஒருவர் இதனைக் கொடூரமானது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்த அச்சிறுமி , இந்த நடனத்தை தான் ஒரு தியானமாக கருதுவதாக குறிப்பிட்டார். தன்னுடைய திறனை அறிய இது தனக்கொரு சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ள அவர், எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முடிகிறதா என்று முயற்சிப்பதுபோல் இதுவும் ஒரு முயற்சியாகும் என்றார்.
No comments:
Post a Comment