சிரிய போரில் 10,000 சிறுவர்கள் கொலை – ஐ.நா சபை கடும் கண்டனம்
சிரியாவின் உள்நாட்டு போரில் இதுவரை குறைந்த பட்சம் சுமார் 10,000 சிறுவர்கள் கொல்லபட்டுள்ளதாகவும், பிற சிறுவர்கள் ‘சொல்லமுடியாத’ துன்பத்திற்கு ஆளாக்கபட்டுள்ளதாகவும் ஐ.நா. சபை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படைகள் போராடி வருகின்றன. ராணுவத்துக்கும், புரட்சி படைகளுக்கும் நடந்துள்ள சண்டையில் பொதுமக்கள் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்போர் தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 10 ஆயிரம் சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. ராணுவம் மற்றும் புரட்சி படைகள் இருதரப்பினருமே குழந்தைகளை கொன்று வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், குழந்தைகளை மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு கம்பியால் அடிப்பது, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவது, நகத்தை பிடுங்குவது, சிகரெட் துண்டுகளால் சூடு வைப்பது போன்ற சித்ரவதைகளுக்கு குழந்தைகள் பலர் ஆளானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment