Tuesday, 18 March 2014

கிரிமியா வாக்கெடுப்பு எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு

கிரிமியா வாக்கெடுப்பு எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு

Source: Tamil CNN
 petrol
உக்ரைனில் இருந்து கிரிமியாவை பிரித்து ரஷ்யாவுடன் இணைக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதனை ஏற்க மறுத்துள்ள அமெரிக்கா, ரஷ்ய ராணுவத்தின் தலையீட்டின் பேரில் உக்ரைன் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இந்த வாக்கெடுப்பு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியது. மேலும், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு உக்ரைனில் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவி வருவதால், ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. நியூயார்க்கின் பிரதான ஒப்பந்ததாரரான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட், ஏப்ரல் மாதம் டெலிவரி செய்யும் கச்சா எண்ணெய் விலையை ஒரு பேரலுக்கு 23 சென்ட்டுகள் உயர்த்தி 99.12 டாலராக நிர்ணயித்துள்ளது. இதேபோல் மே மாதம் விநியோகம் செய்யும் பிரென்ட் கச்சா எண்ணெய் 11 சென்டுகள் உயர்ந்து, 108.32 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆனது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடையை விதித்தால் உக்ரைனில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் 70 சதவீத எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment