Monday, 17 March 2014

இலங்கைக்கு கடத்த முயன்ற இந்துக் கடவுளர்களின் சிலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற இந்துக் கடவுளர்களின் சிலைகள் பறிமுதல்

Source: Tamil CNN
 2138355613Evening3
இலங்கைக்கு கடத்தவிருந்த 22 இந்துக் கடவுளர்களின் சிலைகளை தமிழ்நாடு சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் பறக்கும்படை அதிகார்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தவேளை இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் கும்பகோணத்தில் இருந்து மகாபலிபுரம் வழியாக ஒரு காரில் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர், அம்மன், முருகன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இவை, ஒரு அடி முதல் இரு அடிகள் வரை இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று தெரிகிறது. வெண்கலம், பித்தளை இவற்றால் ஆன இந்த சிலைகளை எடுத்துச் சென்றது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...