அகஸ்தியர் அருவி
தமிழகத்தின்
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள
அருவிகளில் முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது பாபநாசம்
அகஸ்தியர் அருவி. இது, பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4
கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள
புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்த அருவியின் உயரம் 100
மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம். இந்த
அருவி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் இதில் நீராடுவது நோய்களைக்
குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த அருவியின் வழியாக
மலைமேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும். இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தைக் காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தைத் தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.
No comments:
Post a Comment