Saturday, 21 September 2013

5000 பெண்களை திருமணம் செய்த நபர்

5000 பெண்களை திருமணம் செய்த நபர்

Source: Tamil CNN
சட்டீஸ்கரில் 5000க்கும் மேற்பட்ட திருமணம் புரிந்ததாக 47 வயது ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா(47).இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ.50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது.இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.
மேலும் கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ.25 ஆயிரமும் என பங்கிட்டு கொண்டுள்ளனர்.ராஜ்நண்டன் பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள விஜய் மீது இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 420, 467 மற்றும் 468-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது விஜயிடம் நடத்தி வரும் விசாரணையில், அவரது திருமணங்களின் எண்ணிக்கை கூடவும், குறையவும் வாய்ப்பிருப்பதாகத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment