Monday 21 September 2020

மனப்பார்வை

 தாய்லாந்து புத்தமத துறவிகள்


மனப்பார்வைக்கு விளக்கங்களும், அர்த்தங்களும் தேவையில்லையே

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒருமுறை ஞானி இக்கயூ அவர்களிடம் ஒருவர் சென்று, மிகச் சுருக்கமான ஞான மொழி ஒன்றை எழுதித்தருமாறு கேட்டார். அப்போது ஞானி, ‘பார்’ என்று எழுதிக்கொடுத்தார். ப்பூ, இவ்வளவு சுருக்கமாக இருக்கிறதே, இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே என்று அவர் சொன்னதால், ஞானி, ‘பார்’, ‘பார்’ என்று எழுதிக்கொடுத்தார். பொறுமை இழந்த அவர் ஞானியிடம், சரி, அதன் அர்த்தத்தையாவது விளக்கி எழுதிக்கொடுங்கள் என்று கேட்டார். அப்போது ஞானி இக்கயூ அவர்கள், ‘பார்’ என்றால், ‘பார்’ என்றுதான் அர்த்தம் எழுதிக்கொடுத்தாராம்.

ஆம். மனப்பார்வைக்கு விளக்கங்களும், அர்த்தங்களும் தேவையில்லையே.(பேராசிரியர்  சேவியர் அந்தோனி சே.ச.)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...