தமிழை வழக்குமொழியாக அறிவிக்கக் கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் 5 பேர் குதிப்பு
ஐகோர்ட் வளாகத்தில் இருந்து வெளியேறவும் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஐகோர்ட் தலைமை பதிவாளர் பொன். கலையரசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:சென்னை ஐகோர்ட் வளாகத்தில் அனைத்து கதவுகளும் காலை 9 மணிக்கு திறக்கப்படும். மாலை 6 மணிக்கு மூடப்பட்டு விடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஐகோர்ட் வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை. மறு உத்தரவு வரும் வரை இது அமல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஏற்கனவே ஐகோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் 3 வக்கீல்களுடன் மேலும் 5 வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment