சிவனொளிபாதமலை தங்க வேலிகள் திறப்பு
Source: Tamil CNNசிவனொளிபாதமலையிலுள்ள இரும்பு வேலிகளை அகற்றி அதற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்ட தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள், பௌர்ணமி தினமான இன்று (16), சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள் நல்லதண்ணி, கல்பருக்ஷ விகாரையிலிருந்து சிவனொளிபாதமலை உச்சிக்கு யாத்திரிகர்கள் மூலமாகவும் பொலிஸார் மூலமாகவும் கொண்டுசென்று பொருத்தப்படும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களில் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில், இந்த வேலிகளுக்கு கடந்த சில நாட்களாக விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு செங்கல் மற்றும் ஏனைய பொருட்களால் கட்டப்பட்ட மதில்களை அகற்றி கருங்கல் மூலம் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment