Tuesday, 25 March 2014

சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் மூன்றாவது தீர்மான வரைவு வெளிவந்தது: 2002ம் ஆண்டு முதல் விசாரணை

சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் மூன்றாவது தீர்மான வரைவு வெளிவந்தது: 2002ம் ஆண்டு முதல் விசாரணை

Source: Tamil CNN 
 USA-150-667
ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளினால் முனைவைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மூன்றாவது வரைபு சற்று முன்னர் வெளிவந்துள்ளது.
வெளிவந்துள்ள இந்த தீர்மான வரைபே இறுதித்தீர்மான வரைபாக இருக்கலாம் என எதிர்பார்கப்படுகின்ற நிலையில், வரும் வியாழக்கிழமை (27-03-2014) சபையில் வாக்கெடுப்புக்கு இது விடப்படலாம் என ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை கேட்டுக் கொள்வதாக இந்த தீர்மான வரைபு அமைந்துள்ளது.
இதன்பால் 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியே விசரணைக்கு உட்படுத்தப்படும் காலவரையறையாகவுள்ளது.
வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்த தீர்மான வரைபின் 8வது பந்தியில், குறிப்பிடத்தக்கதான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்வழி, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், அத்துமீல்கள் தொடர்பாக, விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகளின் உதவியுடன், உண்மைகளை நிறுவி, மீறல்கள் இடம்பெற்ற சூழல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினை இத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணைக்கான காலவெளியில் 1983ம் ஆண்டு முதல் விசரணைகள் நடத்தப்படவேண்டும் என கனடா வாதிட்டிருந்தது.
தற்போது உள்ளடக்கப்பட்டுள்ள காலவெளியின் ஊடாக மகிந்த ராஜபக்ச தலையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதோடு, ஐ.தே.க அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் தவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment