தூத்துக்குடி கடற்பகுதியில் சீனப் போர்க்கப்பல் சுற்றிவளைப்பு:ஆயுதங்களுடன் நின்றதாக தகவல்
தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது சீனாவின் போர்க்கப்பல் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அது சீனாவின் போர்க்கப்பல் என்று தெரியவந்துள்ளது. அந்த கப்பல் சோதனையிடப்பட்டும் வருகிறது. இதுகுறித்து கடலோரக் காவல்படையின் தூத்துக்குடி பிரிவு கட்டளை அதிகாரி ஆனந்தகுமார் கூறுகையில், கப்பல் பிடிபட்டது உண்மை. அது வியாபாரக் கப்பலோ, மீன் பிடி கப்பலோ இல்லை. போர்க்கப்பல் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு எந்த தகவலையும் இப்போதைக்குக் கூற இயலாது என்றார்.
No comments:
Post a Comment