சிதைந்துபோன கோட்டைக்குள் புதைந்து கிடக்கும் ஆயிரம் தொன் தங்கம்
அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர்.இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் தொன் தங்கப்புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத்திடம் தமது கனவை சொல்லி அவரை நம்ப வைத்துள்ளார்.மத்திய அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து தொல்லியல் துறை, ஆயிரம் தொன் தங்கப் புதையலை தேடும் பணியை தொடங்க உள்ளது. வரும் 18ந் தேதி முதல் இப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment