சீனாவில் ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
சீனாவின் குன்மிங் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயங்கரவாதிகள் பொதுமக்களை கத்தியால் தாக்கியுளனர். இந்த தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
130க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும், இச்சம்பவத்தை அடுத்து அங்கு நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலை சின்சியாங் பிரிவினைவாதிகள் திட்டமிட்டு நடத்தியிருக்க கூடும் எனஅரசு தரப்புப் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விரைந்து விசாரணை நடத்த சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் சீன அரசுத் தலைவருமான சீசின்பீங் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு சட்டப்படி கடுமையாக தண்டனை விதிக்க வேண்டும், சமூக நிதானத்தை முழு மூச்சுடன் பேணிகாத்து மக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
மேலும், ஐ.நா பொதுச் செயலாளர் பான்கிமூன் வெளியிட்ட அறிக்கையில், குன்மிங் வன்முறை பயங்கரவாத நிகழ்ச்சிக்கு வண்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment