Wednesday, 19 June 2013

கொழுப்பைக் குறைக்கும் சப்போட்டோ!

கொழுப்பைக் குறைக்கும் சப்போட்டோ!

இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு சப்போட்டா மாநிலம்என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும்.
இதயம் தொடர்பான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும்.
சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
தோலை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் சித்தார்கோட்டை

Catholic News in Tamil - 19/06/13


1. வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

2. திருநற்கருணைச் செபங்களில் புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும்

3. புலம்பெயர்ந்து செல்லும் மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளது - கர்தினால் Leonardo Sandri

4. 450க்கும் அதிகமான குழந்தைகள் வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர்

5. விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை - பேராயர் சில்வானோ தொமாசி

6. வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களில், விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம்

7. மோதல்களைத் தவிர்க்க, கத்தோலிக்கத் திருஅவை உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது - ஆப்ரிக்க ஆயர்

8. ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள்

------------------------------------------------------------------------------------------------------

1. வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன்,19,2013. சட்டங்களையும், கட்டளைகளையும் கவனமாகப் படிப்பதில் கிறிஸ்தவ வாழ்வு அமைவதில்லை, மாறாக, மகிழ்வுள்ளவரான, தாராள மனம் கொண்டவரான கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இத்தகைய மனநிலை அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய மறையுரையில் கூறினார்.
குடும்ப வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் பணியாளர்களுடன் புனித மார்த்தா இல்லத்தில் இப்புதன் காலை திருப்பலியாற்றியத் திருத்தந்தை, மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் வெளிவேடக்காரரைப் போல் இருப்பதன் ஆபத்தை தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
கிறிஸ்தவ தவத்தின் அடிப்படைகளான செபம், நோன்பு, தர்மம் ஆகிய மூன்று தூண்களை தகுந்த முறையில் புரிந்துகொள்ளாமல் வாழ்வது, மற்றவர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளதென்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, ஆலயத்தில் வேண்டச் சென்ற பணிவான சமாரியரே நமது பக்தி முயற்சிகளுக்குத் தகுந்த எடுத்துக்காட்டு என்பதையும் வலியுறுத்தினார்.
ஆயர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Marc Ouellet அவர்களும், குடும்ப வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்களும் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருநற்கருணைச் செபங்களில் புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும்

ஜூன்,19,2013. திருப்பலியின் மத்தியப் பகுதியில் பயன்படுத்தப்படும் 2,3,4 ஆகிய திருநற்கருணைச் செபங்களில் புனித கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருவழிபாட்டுக்கும், அருள் சாதன வழிமுறைகளுக்கும் பொறுப்பான திருப்பீடப் பேராயம் இப்புதனன்று வெளியிட்ட இவ்வறிக்கையில், ஆண்டவராம் கிறிஸ்துவின் குடும்பத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட புனித யோசேப்புவின் பெயர் முதல் திருநற்கருணைச் செபத்தில் தற்போது இடம்பெற்றிருப்பதைப் போல, 2,3,4 ஆகிய திருநற்கருணைச் செபங்களிலும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப் பூர்வ அறிக்கையை வெளியிட்ட, இத்திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Antonio Cañizares Llovera, முத்திபேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இந்த முயற்சியைத் துவக்கினார் என்றும், அவரைத் தொடர்ந்த அனைத்துத் திருத்தந்தையரும் இக்கருத்தை ஆர்வமாக ஆதரித்தனர் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புனித யோசேப்புவின் பெயரை இணைக்கும் அதிகாரப் பூர்வமான வார்த்தைகளை இலத்தீன் மொழியில் வெளியாகியுள்ளன என்றும், விரைவில் ஏனைய மொழிகளில் இந்த வார்த்தைகள் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் கர்தினால் Cañizares Llovera.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புலம்பெயர்ந்து செல்லும் மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளது - கர்தினால் Leonardo Sandri

ஜூன்,19,2013. மிக அவலமான நிலையில் வாழும் மக்களின் துன்பங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று அவர்கள் சார்பில் குரல் எழுப்பும் அதே வேளையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் திருஅவை கடமைப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கீழை வழிபாட்டு முறை திருஅவைகளின் 86வது ஆண்டுக் கூட்டத்தை இச்செவ்வாயன்று திருப்பலியுடன் துவக்கிவைத்த கீழை வழிபாட்டு முறை திருஅவைகள் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கீழை வழிபாட்டு முறையைப் பின்பற்றும் நாடுகளில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் அப்பகுதிகளில் நிலவும் அமைதியற்றச் சூழலால் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் பிரச்சனையை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Sandri அவர்கள், இம்மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளதென்று எடுத்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்கத்திய நாடுகள், இந்த பிரச்சனையுடன், கீழை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்துவரும் மக்களை ஆதரிக்கும் சவாலையும் ஏற்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார் கர்தினால் Sandri.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. 450க்கும் அதிகமான குழந்தைகள் வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர்

ஜூன்,19,2013. வசதிகள் குறைந்த குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 450க்கும் அதிகமான குழந்தைகள் ஜூன் 23, வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மதங்களுக்கு இடையே நல்லுறவையும், உரையாடலையும் வளர்க்கும் வண்ணம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 'புறவினத்தார் முற்றம்' என்ற முயற்சி துவக்கப்பட்டது.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாக, "குழந்தைகளின் இரயில்: அழகின் வழி ஒரு பயணம்" என்ற பெயர் தாங்கிய ஒரு பயணத்தில் Milan, Bologna, Florence ஆகிய நகரங்களில் உள்ள பேராயலங்களில் 450க்கும் அதிகமான குழந்தைகள் கல்விச் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.
இந்தச் சுற்றுலா இந்த ஞாயிறன்று மிலான் நகரில் ஆரம்பமாகி, இறுதியில் வத்திக்கானில் உள்ள இரயில் நிலையத்தில் முடிவுறும் என்றும், இப்பயணத்தின் இறுதியில், இக்குழந்தைகளைத் திருத்தந்தை சந்திப்பார் என்றும் திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவரான கர்தினால் Gianfranco Ravasi கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை - பேராயர் சில்வானோ தொமாசி

ஜூன்,19,2013. பார்வைத்திறனற்றோர் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் இல்லாத நிலையை 'புத்தகப் பட்டினி' என்று நாம் அழைக்கக்கூடும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பார்வைத்திறன் அற்றோரின் பிரச்சனைகளைக் கலந்து பேசும் ஐ.நா. கருத்தரங்கு ஒன்றில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
உலகின் அனைத்து கலைப் படைப்புக்களையும் அனைவரும் சமமாக அனுபவிக்கவேண்டும் என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை என்றாலும், விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.
உலக நலவாழ்வு நிறுவனமான, WHOவின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, உலகில் 28 கோடியே, 50 இலட்சம் பேர் பார்வைத் திறனற்றவர்கள் என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர் என்றும் பேராயர் தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
வளரும் நாடுகளில் பார்வைத்திறனற்று துன்புறும் மக்கள் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் அங்கு 1 விழுக்காடு மட்டுமே உள்ளனவென்றும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த நிலை 5 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.
இன்றைய புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு, பார்வைத் திறனற்றோர் கணணி வழியாக நூல்களை வாசிக்கக் கேட்டு பயன்பெற முடியும் என்றாலும், இத்தகைய வசதிகள் பலரை அடைவதற்குத் தடையாக, சட்டப் பூர்வமான சிக்கல்கள் உருவாகியுள்ளன என்று பேராயர் தொமாசி சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களில், விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம்

ஜூன்,19,2013. வேளாண்மையில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண விழையும் உலக அரசுகள், தங்கள் திட்டங்களில் விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 19, 20 அகிய நாட்களில் உரோம் நகரில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் 38வது அமர்வில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் Luigi Travaglino இவ்வாறு கூறினார்.
உலக உணவு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மரபணு மாற்ற ஆய்வுகள், பல்வேறு வகையான உணவுப் பொருட்களையும், உயிர்களையும் பெருமளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Travaglino, இந்தப் போக்கினைக் கண்காணிக்கும் வழிமுறைகள் உலக அரங்கில் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
வேளாண்மைத் துறையில் மட்டுமல்ல, காடுகள், கடல்கள் ஆகிய கருவூலங்களையும் காப்பாற்றினால் மட்டுமே, உலக உணவு உற்பத்தியில் நாம் நிறைவையும், சமமான பங்கீட்டையும் பெறமுடியும் என்று பேராயர் Travaglino தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. மோதல்களைத் தவிர்க்க, கத்தோலிக்கத் திருஅவை உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது - ஆப்ரிக்க ஆயர்

ஜூன்,19,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை, கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என்றும், இந்த உரையாடல் இன்றி, நாட்டில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் மதங்களுக்கிடையே நல்லுறவு இல்லாததால், தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், இந்த நிலையை மாற்ற உரையாடல் மிகவும் அவசியம் என்றும் Bangassou ஆயர் Juan José Aguirre Munos, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நாட்டில் பணியாற்றும் பல அரசு சாரா அமைப்புக்கள் கத்தோலிக்கத் திருஅவையிடம் இந்த விண்ணப்பத்தை எழுப்பியதால், தலத் திருஅவை இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று ஆயர் Munos விளக்கினார்.
LRA எனப்படும் வன்முறைப் படையினருக்கும், உகாண்டாவின் கொரில்லாப் படையினருக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைக் குறித்தும் ஆயர் Munos தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : Fides

8. ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள்

ஜூன்,19,2013. மனித வர்த்தகத்தின் கொடுமைகள், போரினால் பாதிக்கப்பட்ட காபுல் நகரின் தெருக்களில் வாழும் ஒரு சிறுவனின் நம்பிக்கை, மற்றும் வயது முதிர்ந்தோருக்கு உதவுதல் ஆகிய கருப்பொருட்கள் கொண்ட வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் கலை விழாக்களின் ஓர் அங்கமாக, ஐ.நா. அவையும், நியூயார்க் நகரும் இணைந்து, இத்திங்கள் இரவு வழங்கிய தங்கப் பதக்கத்தை, பாஸ்டன் நகரைச் சேர்ந்த Philip Martin என்பவர் பெற்றார்.
ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்வுகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில், "Underground Trade" என்ற தலைப்பில், மனித வர்த்தகத்தின் கொடுமைகளை விளக்கும் பாஸ்டன் நகர WGBH வானொலி நிலைய நிகழ்வு முதல் பரிசைப் பெற்றது.
நெதர்லாந்து வானொலி நிலையம் உருவாக்கியிருந்த காபுல் நகரச் சிறுவனைப் பற்றிய நிகழ்ச்சி வெள்ளிப்பதக்கத்தையும், கனடா நாட்டு வானொலி, முதியோருக்கு உதவுதல் குறித்து உருவாக்கியிருந்த நிகழ்ச்சி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
1957ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நியூயார்க் கலை விழாக்களில், 1990ம் ஆண்டு முதல் ஐ.நா.வும், நியூயார்க் நகரும் இணைந்து சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட வானொலி நிகழ்சிகளுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றன.

ஆதாரம் : UN

United Arab Emirates opens $5m Catholic church

United Arab Emirates opens $5m Catholic church

Existing church is occasionally 10 times over capacity.

 

Abu Dhabi:  Vatican representative Cardinal Fernando Filoni will open the new Catholic church in Ras Al Khaimah on Friday.

Cardinal Filoni, the Vatican’s Prefect of the Congregation for the Evangelisation of Peoples, will consecrate the 5,000 square metre St Anthony of Padua Church in the Al Jazira Al Hamra district, about 25 km from the city.

Other officials who will attend the event include Archbishop Petar Rajic, Apostolic Nuncio to the Arabian Peninsula and Bishop Paul Hinder, Vicar Apostolic of Southern Arabia.

“This is a great achievement,” said Fr Galdolf Josef, 73-year-old secretary of Abu Dhabi-based Bishop Paul Hinder, of the Dh18.5-million church. “Ras Al Khaimah is developing quite a bit, especially its industries and tourism, and so is the number of migrant workers. We’re thankful to the Ruler [of Ras Al Khaimah] for giving us the land.”

There are about 6,000 Catholics in Ras Al Khaimah, said the Swiss prelate.

In the UAE there are an estimated 700,000 Catholics who go to 10 churches and served by about 40 priests speaking a dozen languages.

“The church is very much alive here, in Africa and certainly in Asia. All of the members are migrant workers. Besides Filipinos, Indians and Christian Arabs, we have a growing number of Korean Catholics too. Services in rather small churches here are packed, while in Europe, big and beautiful cathedrals are almost empty,” Fr Galdolf said.

The 1,200-seat church can accommodate up to 1,500 worshippers. Two major roads link the new church to Umm Al Qwain, Ajman and Sharjah.

The existing chapel in RAK’s Al Nakheel district, meant for 500 parishioners, sometimes caters to more than 10 times its capacity.

Source: Gulf news

Remembering Pacem in Terris, 50 years on

Remembering Pacem in Terris, 50 years on

The Cold War encyclical was to all men of good will, not just Catholics.

 

International:  On April 11, 1963, The Beverly Hillbillies was the top television show in the United States, works by J. D. Salinger and John Steinbeck topped the fiction and nonfiction bestseller lists, and the lead headline in the New York Times was “Atom Submarine with 129 Lost in Depths 220 Miles Off Boston; Oil Slick Seen Near Site of Dive.” The Chiffons’ “He’s So Fine” was the nation’s most popular song; It Happened at the World’s Fair, starring Elvis Presley, was the most popular movie. And Blessed John XXIII issued Pacem in Terris (“Peace on Earth”), the first papal encyclical addressed not only to the Catholic faithful, but also to all men of good will.

“By addressing an encyclical on peace to all men of good will, John XXIII was not merely being good Pope John,” says Mary Ann Glendon, president of the Pontifical Academy of Social Sciences and the Learned Hand Professor of Law at Harvard Law School. “He was insisting that the responsibility for setting conditions for peace does not just belong to the great and powerful of the world—it belongs to each and every one of us. That’s crystal clear in the closing paragraphs where he says, ‘There is an immense task incumbent on all men of good will’—the task ‘of bringing about true peace in the order established by God.’ It’s ‘an imperative of duty; a requirement of love.’”

Source: catholic world report

இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் :இராமநாதபுரத்தில் பரபரப்பு!

இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் :இராமநாதபுரத்தில் பரபரப்பு!

Source: Tamil CNN
ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் திகதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் திகதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.இதை அடுத்து அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பந்தல் கட்டி உறவினர்களும் கூடிவிட்டனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அவரது கால் விரல் அசைந்துள்ளது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது. இதை கவனித்த சிலர், அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவர் உயிருடன் இருப்பதும், அவரது இதயம் பலவீனம் அடைந்திருப்பதும் தெரியவந்தது.
இதை அடுத்து, அவர் இதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை உறவினர்களுடன் உற்சாகமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். அவர் கூறுகையில், சிவ பெருமானைத் தொடர்ந்து பூஜை செய்து வந்தோம். சிவபெருமானின் அருளால் அவர் உயிருடன் மீண்டுள்ளார் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

பறக்கும் மோட்டார் சைக்கிள்: இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

பறக்கும் மோட்டார் சைக்கிள்: இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

Source: Tamil CNN
இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 புரோபெல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன. 95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.
அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது. இந்த நிகழ்ச்சியின்போது மோட்டார் சைக்கிளில் பொம்மை மனிதன் உட்கார வைக்கப்பட்டிருந்தான்.எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் எந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மூளையில் முள் குத்தினால் வலிக்காது...

மூளையில் முள் குத்தினால் வலிக்காது...

நமது உடலின் கையிலோ, காலிலோ முள் குத்தினால், அதன் வலியை நமக்கு உணர்த்துவது நம் மூளை. ஆனால், மூளையில் முள் குத்தினால், நாம் வலியை உணர வழியில்லை. உடலின் வேறுபகுதிகளில் உருவாகும் வலிகளை உடனுக்குடன் நமக்கு உணர்த்தும் நமது மூளை, தன்னில் உருவாகும் வலியை உணர முடியாது. ஏனெனில், நமது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நரம்புகளின் நுனியில், வலி உணரும் வாசல்கள் (Pain receptors) உள்ளன. இவை, நமது மூளைப்பகுதியில் கிடையாது.
தலைவலி வருகிறதே என்ற கேள்வி எழலாம். நமது மூளையைச் சுற்றியுள்ள திசுக்கள், நரம்புகள், தோல், எலும்புகள் ஆகியவற்றில் உருவாகும் அழுத்தம், தலைவலியாக உணரப்படுகிறது. இதை உணர்த்துவதும் நமது மூளைதான்.
வலியை மழுங்கச் செய்யும் மருந்து ஏதுமின்றி, மூளையில் அறுவைச் சிகிச்சைகள் செய்யலாம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமல்ல. ஏனெனில் மூளையை அடைவதற்கு, வலி உணரும் பல பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். எனவே, மூளை அறுவைச் சிகிச்சையின்போது பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

ஆதாரம் : இணையத்தளம்

 

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...