Friday, 29 August 2014

Saint Rose of Lima Virgin (1586-1617)

Saint Rose of Lima

Virgin
(1586-1617)

Saint Rose of LimaSaint Rose of Lima
This lovely flower of sanctity, the first canonized Saint of the New World, was born at Lima, Peru, in 1586. She was christened Isabel, but the beauty of her infant face earned for her the title of Rose, which she thereafter bore. As a child still in the cradle, her silence during a painful surgical operation seemed to foretell the thirst for suffering which would consume her heart.
At an early age she engaged herself as a servant to support her impoverished parents, then worked day and night. In spite of hardships and austerities her beauty ripened with increasing age, and she was openly much admired. Fearing vanity would enter her heart, she cut off her hair, blistered her face with pepper and her hands with lime. She never left the interior of her parents' house in Canta, for four years, not even to walk in an inviting garden just beyond its walls. She finally obtained her parents' permission to be enrolled in the Third Order of Saint Dominic; from her childhood she had taken Saint Catherine of Siena as her model, and she then redoubled her penance. The Blessed Sacrament seemed virtually her only food. Her love for it was intense. Her fasting was near miraculous; during Lent in particular, she denied herself her former single piece of bread each day, to consume only a few orange seeds. Her disciplines were of an almost incredible severity, and her hair shirt reached from her shoulders to her wrists and knees; not satisfied with its rudeness, she armed it with iron nails.
The cell of Saint Rose was a garden hut, her couch a box of broken tiles. Concealed by her veil, a silver crown armed with ninety sharp points encircled her head. More than once, when she shuddered at the prospect of a night of torture, a voice said, My cross was yet more painful. The demon tormented her for fifteen years with insupportable temptations; but God sustained His spouse against them, though she would gladly have died rather than live any longer in their clutches. When a Dutch fleet prepared to attack the city of Lima, Rose took her place before the tabernacle, and wept because she felt unworthy to die in its defense, as she hoped she might; the enemy weighed anchor soon afterwards and departed without attempting a siege. All of Saint Rose's sufferings were offered for the conversion of sinners, and the thought of the multitudes in hell was ever before her soul. She died in 1617, at the age of thirty-one.

புனித பவுல் கூறும் "என் அன்பார்ந்த பிள்ளை" (Saint Timothy)

புனித பவுல் கூறும் "என் அன்பார்ந்த பிள்ளை"
(Saint Timothy)

திமொத்தேயு என்பவர் கிறிஸ்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து, கி.பி. 97ம் ஆண்டளவில் இறந்த ஒரு புனித ஆயர் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும் "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.
புதிய ஏற்பாட்டின்படி, திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறித்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும்.
திமொத்தேயு பற்றிய சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலிலும், புனித பவுல் பல்வேறு திருஅவைகளுக்கு எழுதியக் கடிதங்களிலும்  காணக்கிடக்கின்றன.
பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைப்பதையும், திமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை மேற்கொண்டதையும், திமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டதையும், திமொத்தேயுவின் தாய் யூனிக்கி என்பவரும், பாட்டி லோயி என்பவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததையும், திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு கொண்டிருந்தார் என்பதையும், திமொத்தேயு ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதையும், திமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்ததையும் திருத்தூதர் பணிகள் நூல் மற்றும் பவுலின் கடிதங்கள் வழியே நாம் அறிகிறோம்.
பிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ம் ஆண்டளவில் எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97ல், திமொத்தேயுவுக்கு 80 வயதானபோது, அவர் புறவினச் சமயக் கொண்டாட்டங்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக்கொண்டுபோய் கல்லால் எறிந்து, கொன்று போட்டனர் என அறிய வருகிறோம்.
கி.பி. 4ம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் புனிதப் பொருள்கள் காண்ஸ்டாண்டிநோபுளில் உள்ள தூய திருத்தூதர்கள் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
பவுலின் மற்றொரு சீடரான தீத்து என்பவரோடு இணைந்து திமோத்தேயுவின் விழா சனவரி 26ம் தேதி திருஅவையில் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
 

செய்திகள் - 29.08.14

செய்திகள் - 29.08.14
------------------------------------------------------------------------------------------------------

1. முதல் உலகப் போரின்  நினைவாக, Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் திருத்தந்தை

2. புனித அகஸ்டின் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்

3. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே - கர்தினால் Vegliò

4. உத்திரப் பிரதேசத்தில் இந்து அடிப்படைவாதக் குழுவினரின் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது - கர்தினால் கிரேசியஸ்

5. குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் மதத் தலைவர்களைக் குறித்து நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் - பேராயர் Khazen

6. மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டம்

7. துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti

8. ஹெயிட்டி நிலநடுக்கத்தால் உடல் உறுப்புக்களை இழந்தோரின் கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி - ஆவணப் படம் வெளியீடு

------------------------------------------------------------------------------------------------------

1. முதல் உலகப் போரின்  நினைவாக, Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் திருத்தந்தை

ஆக.29,2014. வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி, சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வடகிழக்கு இத்தாலியில் அமைந்துள்ள Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் நிகழ்வின் விவரங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி காலை 8.00 மணிக்கு சம்பினோ விமானத் தளத்தலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 9 மணியளவில் Ronchi எனுமிடத்தில் உள்ள விமானத் தளத்தை அடைகிறார்.
9.15 மணிக்கு Redipuglia கல்லறைக்கு தனியேச் சென்று செபிக்கும் திருத்தந்தை, அருகில் உள்ள இராணுவ நினைவுக் கோவிலில் திருப்பலியாற்றி மறையுரை வழங்குகிறார்.
திருப்பலியின் இறுதியில், உலகின் அனைத்து போர்களிலும் இறந்தோரை நினைவுகூர்ந்து செபங்கள் சொல்லப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கோவிலில் உள்ள ஆயர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் எரியும் விளக்குகளை வழங்குவார் என்றும், இவ்விளக்குகள் முதல் உலகப் போரின்  நினைவாக பல்வேறு மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள மிகப் பெரிய இராணுவக் கல்லறையான Redipugliaவில், முதல் உலகப் போரின்போது இறந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புனித அகஸ்டின் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்

ஆக.29,2014. தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும் என்ற ஆவலால் புனித அகஸ்டின் நிறைந்திருந்தார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 28, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித அகஸ்டின் திருநாளையொட்டி, உரோம் நகரில் உள்ள புனித அகஸ்டின் பசிலிக்காவில் திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், சென்ற ஆண்டு, இதேநாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு சென்று திருப்பலியாற்றி, புனித அகஸ்டின் துறவுச் சபையின் 184வது பொது அவையைத் துவக்கி வைத்ததை நினைவு கூர்ந்தார்.
அறிவுக் களஞ்சியமாக விளங்கிய புனித அகஸ்டின் அவர்களின் கருத்துக்களில் பலவற்றை மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இப்புனிதரைப் போல, தலைசிறந்த கிறிஸ்தவராகவும், மக்களை வழிநடத்தும் மேய்ப்பராகவும் வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் பசிலிக்காவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், புனித அகஸ்டின் துறவுச் சபையினர் பசிலிக்காவில் பதித்திருந்த ஒரு நினைவுக் கல்லை, கர்தினால் பரோலின் அவர்கள், திறந்து வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே - கர்தினால் Vegliò

ஆக.29,2014. ஒடுக்கப்பட்ட வறியோரின் குரல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்படி, அவர்களைக் குறித்து நமது மறையுரைகளிலும், இன்னும் பல பொது உரைகளிலும் பேசுவதற்கு நாம் தயக்கமோ, சலிப்போ அடையக்கூடாது என்று திருத்தந்தை தன்னிடம் கூறியதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாடுவிட்டு நாடு செல்வோர் மேய்ப்புப்பணிக்காக செயலாற்றும் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Antonio Maria Vegliò அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தபின், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகின் பல இடங்களில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò அவர்கள், உலகின் பல நாடுகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை நாம் கேட்பதில்லை என்று எடுத்துரைத்தார்.
தங்களையே காத்துக்கொள்ள முடியாத, வலுவிழந்த மக்களைக் காப்பது திருஅவையின் முக்கிய கடமை என்பதில் திருத்தந்தை மிகவும் உறுதியாக இருக்கிறார் என்று கூறிய கர்தினால் Vegliò அவர்கள், வன்முறையையே வாழ்வாகக் கொண்டுள்ளவர்களைத் தடுப்பதற்கு உலக அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. உத்திரப் பிரதேசத்தில் இந்து அடிப்படைவாதக் குழுவினரின் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது - கர்தினால் கிரேசியஸ்

ஆக.29,2014. உத்திரப் பிரதேசத்தில் பழங்குடியினரான கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றியிருக்கும் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது என்று மும்பைப் பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
1995ம் ஆண்டு, உத்திரப் பிரதேசத்தில் உள்ள வால்மீகி என்ற பழங்குடியினரில் சிலர் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். அண்மையில் அவர்களை மீண்டும் இந்து மதத்தில் சேர்க்கும் ஒரு முயற்சியாக, இந்து அடிப்படைவாதக் குழுவினர், ஒரு கிறிஸ்தவக் கோவிலின் மீதிருந்த சிலுவையை உடைத்துவிட்டு, அக்கோவிலில் இந்துக் கடவுளின் படத்தை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்களைத் தேடிச் சென்று உதவிகள் செய்வது, இந்தியத் திருஅவையின் வரலாறாக இருந்துள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் அண்மையக் காலங்களில் சகிப்பற்ற நிலை ஆபத்தான அளவு வளர்ந்துள்ளது என்றும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் கடந்த ஜூலை மாதம் முதல் பெருமளவில் வளர்ந்துள்ளன என்றும் இந்தியக் கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews

5. குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் மதத் தலைவர்களைக் குறித்து நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் - பேராயர் Khazen

ஆக.29,2014. ஆயுதங்கள் வழியே வன்முறைகளைக் காட்டும் மனிதர்களைவிட, குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் வகையில், மசூதிகளிலும், கோவில்களிலும் வெறுப்பைப் போதிக்கும் மதத் தலைவர்களைக் குறித்தே நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிரியாவின் அலெப்போவில் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் George Abou Khazen அவர்கள், இத்தாலியில் நடைபெற்ற Rimini கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
சிரியாவில் வாழும் இஸ்லாமியர், அனைவரோடும் இணைந்து வாழும் மென்மையான எண்ணங்களும், பழக்கங்களும் கொண்டவர்கள் என்று கூறிய பேராயர் Khazen அவர்கள், அந்நிய நாடுகளிலிருந்து சிரியாவிற்குள் ஊடுருவியுள்ள வன்முறையாளர்கள் தற்போது சிரியாவில் வெறுப்பை வளர்க்கும் போதனைகளைப் பரப்பி வருகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.
இந்த வன்முறையாளர்களுக்கு நிதி உதவிகள் செய்வது ஏனைய அரபு நாடுகள் என்பதை உலகம் நன்கு அறியும் என்று கூறிய பேராயர் Khazen அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக போர்க்களமாக மாறியுள்ள சிரியாவில் அனைத்து அடிப்படை வசதிகளும் குறைந்துள்ளன என்று கூறினார்.

ஆதாரம் : Zenit

6. மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டம்

ஆக.29,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டமிட்டுள்ளது.
1964 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் மக்கள் உரிமைகள் இயக்கத்தின் உச்சக்கட்ட நிகழ்வுகள் நடைபெற்றதைக் கொண்டாட, அடுத்த 12 மாதங்கள் பல்வேறு நிகழ்வுகளை அமெரிக்க ஆயர் பேரவை திட்டமிட்டு வருகிறது.
மக்கள் உரிமைகள் இயக்கத்தில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு குறித்தும் இந்தக் கொண்டாட்டங்களில் நினைவுகூரப்படும் என்று இக்கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் லுயிசியானா ஆயர், Shelton Fabre அவர்கள் கூறினார்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு சமுதாயப் படிப்பினைகளை உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்தப் பொன்விழா ஆண்டில் மக்களுக்கு விளக்க, இந்தக் கொண்டாட்டங்கள் உதவும் என்று ஆயர் Fabre மேலும் எடுத்துரைத்தார்.
1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கறுப்பின மக்களின் தலைவர், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய "எனக்கொரு கனவு உண்டு" என்ற உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவு, மக்கள் உரிமைகள் இயக்கம் தீவிரமாகச் செயல்பட பெரும் உந்துதலாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN

7. துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti

ஆக.29,2014. உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 27ம் தேதி, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வழங்கிய புதன் பொது மறையுரைக்குப் பின்னர், Paul Bhatti அவர்கள் தன் அன்னையுடன் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, Paul Bhatti அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், தன் அன்னை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தது அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பல்வேறு துன்பங்கள் குறித்து உலகச் சமுதாயம் மௌனம் காப்பது குறித்தும், இஸ்லாமியக் குழந்தைகளை வெறுப்பில் வளர்த்துவரும் ஒரு சில இஸ்லாமியத் தலைவர்கள் குறித்தும் Paul Bhatti அவர்கள் தன் பேட்டியில் கவலை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் சார்பில் பல்வேறு பிரச்சனைகளை அரசிடம் கூறிவந்த Shabhaz Bhatti அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபின்னர், அவரது சகோதரர் Paul Bhatti அவர்கள், பாகிஸ்தான் அரசின் அமைச்சர்களில் ஒருவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit

8. ஹெயிட்டி நிலநடுக்கத்தால் உடல் உறுப்புக்களை இழந்தோரின் கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி - ஆவணப் படம் வெளியீடு

ஆக.29,2014. ஹெயிட்டியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை மையப்படுத்திய ஓர் ஆவணப் படம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆகஸ்ட் 30, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்படுகிறது.
The Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பும், EVTV என்ற தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், “Unbreakable: A Story of Hope and Healing in Haiti,” அதாவது, “உடைக்கமுடியாதது: ஹெயிட்டியில் நம்பிக்கையும், நலமும் வழங்கும் ஒரு கதை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு, சனவரியில் ஹெயிட்டியைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவு வலுவான நிலநடுக்கத்தால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்தோரைத் திரட்டி, அவர்களைக் கொண்டு, Zaryen என்று பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி இந்த ஆவணப் படம் விவரிக்கிறது.
Zaryen என்ற எட்டுக்கால் பூச்சி, தன் கால்களில் ஒன்றை இழந்தாலும், தொடர்ந்து வாழும் திறமை பெற்றது என்பதால், இந்த கால்பந்தாட்டக் குழுவிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது என்று The Knights of Columbus உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN
 

செய்திகள் - 28.08.14

செய்திகள் - 28.08.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து சொல்லித் தருகிறார்

2. திருத்தந்தை பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது - பேராயர் சில்வானோ தொமாசி

3. காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தோல்வியையே தழுவியுள்ளனர் - ஆயர் வில்லியம் ஷொமாலி

4. காசாப் பகுதியில் உள்ள குழந்தைகளின் பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும்

5. ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே - சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை

6. ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது: மலேசிய பிரதமர் சாடல்

7. பெங்களூருவில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் மேற்கொண்ட ஊர்வலம்

8. ஜெர்மனியில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நீர்ப் பாலம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து சொல்லித் தருகிறார்

ஆக.28,2014. நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து நமக்குச் சொல்லித் தருகிறார் என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.
மேலும், சிலுவையில் அறையப்பட்டுள்ள கிறிஸ்துவின் பெயராலும், வாழ்வின் ஊற்றாகிய தந்தையின் பெயராலும், அன்பின் ஆவியாரின் பெயராலும் கருணை, நீதி ஆகியவற்றிற்காக உங்களிடம் விண்ணப்பிக்கிறோம் என்று கனடா நாட்டு ஆயர்கள் ஒரு விண்ணப்ப மடலை வெளியிட்டுள்ளனர்.
கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Paul-André Durocher, மற்றும் ஆயர் பேரவை பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த மடல், மத்தியக் கிழக்குப் பகுதியின் ஈராக், சிரியா, புனித பூமி ஆகிய நாடுகளிலும், உக்ரைன் மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் அமைதி நிரந்தரமாகத் திரும்பிட அழைப்பு விடுக்கிறது.
அறையப்பட்ட கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்ற அடிப்படையில், துன்புறும் அனைவரோடும் தங்களை ஒன்றிணைத்து, ஆயர்கள் விடுத்துள்ள இந்த விண்ணப்பம், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் குழுவினர், ஏனைய கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மற்றும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது - பேராயர் சில்வானோ தொமாசி

ஆக.28,2014. 'மூன்றாம் உலகப் போரை நாம் அனுபவித்து வருகிறோம்' என்று திருத்தந்தை அண்மையில் பயன்படுத்திய சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றிவரும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஆப்ரிக்க நாடுகள், சிரியா, ஈராக், மற்றும் உலகின் பல இடங்களில் வெடித்துள்ள ஆபத்தான மோதல்களை கவனத்திற்குக் கொணரும் வகையில் திருத்தந்தை அவர்கள் பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற எண்ணம், ஒவ்வொரு நாடும் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை மட்டும் உறுதி செய்வதற்குப் பதில், உலகளாவிய அமைதியை உருவாக்கத் தூண்டுகிறது என்று பேராயர் தொமாசி அவர்கள் கூறினார்.
கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரும், அமெரிக்க ஆயர்களும் வாஷிங்க்டனில் சந்திக்கும் வாய்ப்பு குறித்தும், 2015ம் ஆண்டு, திருத்தந்தை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு குறித்தும், பேராயர் தொமாசி அவர்கள் இப்பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதுவரை திருத்தந்தையர்கள் ஐ.நா. அவையில் ஆற்றிய உரைகள் அனைத்தும், உலகத் தலைவர்களை ஆழமாகப் பாதித்ததுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஐ.நா.அவையில் உரையாற்றினால் அதன் விளைவுகள் நல்லவிதமாய் அமையும் என்ற நம்பிக்கையை பேராயர் தொமாசி அவர்கள் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : Zenit

3. காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தோல்வியையே தழுவியுள்ளனர் - ஆயர் வில்லியம் ஷொமாலி

ஆக.28,2014. கடந்த ஏழு வாரங்களாக காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் வெற்றி பெறாமல், தோல்வியையே தழுவியுள்ளனர் என்பதை உணர்ந்திருப்பர் என தான் நம்புவதாக, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை துணை ஆயர் வில்லியம் ஷொமாலி அவர்கள் கூறினார்.
இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தேவை என்பதையும், வன்முறைகளால் அல்ல, பேச்சு வார்த்தைகளாலேயே இரு தரப்பினரும் வாழ முடியும் என்பதையும் கடந்த ஏழுவார பலிகள் உணர்த்தியிருக்கவேண்டும் என்று ஆயர் ஷொமாலி அவர்கள் CNA என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 50 நாட்கள் தொடர்ந்த தாக்குதல்களின் விளைவாக, அப்பகுதியில் மருத்துவ உதவிகள் மிக அவசரத் தேவைகளாக உள்ளன என்றும், அதைத் தொடர்ந்து உணவு, உறைவிடம் என்ற மற்ற மனிதாபிமான உதவிகள் தேவை என்றும் ஆயர் ஷொமாலி அவர்கள் எடுத்துரைத்தார்.
மக்களின் உறைவிடங்களை மீண்டும் எழுப்புவதற்கும், குழந்தைகளின் மனநிலையில் உருவாகியுள்ள பாதிப்புக்களை நீக்குவதற்கும் தலத்திருஅவை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆயர் ஷொமாலி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA/EWTN

4. காசாப் பகுதியில் உள்ள குழந்தைகளின் பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும்

ஆக.28,2014. காசாப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் 2000த்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உணவு வழங்கும் பணியில் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள் பணியாளர் Raed Abusahlia அவர்கள் கூறினார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவர் என்று தான் நம்புவதாக, அண்மை கிழக்கு கத்தோலிக்க நற்பணிக் கழகத்தின் இயக்குனர் Sami El-Yousef அவர்கள் கூறினார்.
காசாப் பகுதியில் விரைவில் பள்ளிகள் துவங்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறிய El-Yousef அவர்கள், அப்பகுதியில் உள்ள 3,73,000த்திற்கும் அதிகமான குழந்தைகளின் மனதைச் சூழ்ந்துள்ள பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
காசாப் பகுதியில் இச்செவ்வாய் மாலை 7 மணிமுதல் அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்தும் எவ்விதத் தாக்குதல்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எகிப்திலிருந்து காசாப் பகுதியில் நுழைவதற்கு தரப்பட்டுள்ள அனுமதியால், ஐ.நா.வின் உதவிகளும் அப்பகுதிக்குச் செல்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS

5. ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே - சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை

ஆக.28,2014. சமயச் சுத்திகரிப்பு என்ற பெயரில், ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே என்று குர்திஸ்தான் பகுதிக்கு அண்மையில் சென்று திரும்பிய சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் இக்னாஸ் ஜோசெப் யூனான் அவர்கள் கூறினார்.
அப்பகுதியில் ஐந்து முதுபெரும் தந்தையர் மேற்கொண்ட பயணத்தின் முடிவில், Ankawa, Erbil ஆகிய நகரங்களில் தாங்கள் கண்டது, முழுமையான மனித உரிமை மீறல்களே அன்றி வேறெதுவும் இல்லை என்று முதுபெரும் தந்தை யூனான் அவர்கள் கூறினார்.
நினிவே பகுதியிலிருந்து விரட்டப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், Yezidi இனத்தவர், ஷியா இஸ்லாமியர் மற்றும் Shabak இனத்தவர் ஆகிய சிறுபான்மைக் குழுவினர் அனைவரையும் கடந்த ஆறு நாட்கள் சந்தித்து வந்திருந்த முதுபெரும் தந்தையர், தாங்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இப்புதனன்று, பெய்ரூட்டில், தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் அனைவரும், செப்டம்பர் மாதம் 9 முதல் 11ம் தேதி முடிய, திருப்பீட கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களுடன், வாஷிங்க்டன் நகரில் ஒரு முக்கியச் சந்திப்பை மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று CNS செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CNS

6. ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது: மலேசிய பிரதமர் சாடல்

ஆக.28,2014. ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவினரின் செயல்பாடுகள், இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அவர்கள் (Najib Razak) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள், இறைதூதர் முகமது நபியின் படிப்பினைகளுக்கு எதிராக இருக்கின்றன. இது இஸ்லாம் மதச்சட்டத்துக்கு எதிரானது. சிரியாவிலும், இராக்கிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எங்கள் மத நம்பிக்கை, கலாச்சாரம், அடிப்படை மனிதநேயத்திற்கு எதிராக அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியப் பெண்கள் மூன்று பேர், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பாலியல் தேவைக்காக தங்களை அப்படையுடன் இணைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதன் பின்னணியிலேயே, மலேசிய பிரதமர் நஜீப், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளை கடுமையாக சாடியுள்ளார்.
அல்காய்தா அமைப்பின் இருந்து பிரிந்து ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற கிளர்ச்சிப்படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, இராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன. சன்னி முஸ்லீம்கள் தலைமையிலான ஆட்சியை அமைக்க இவர்கள் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டிருந்த 26 வயது அமெரிக்க இளம்பெண்ணை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அவரின் பாதுகாப்பு கருதி அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அப்பெண்ணின் குடும்பத்தினரும், அமெரிக்க அதிகாரிகளும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரிடமும், வேறு தீவிரவாத இயக்கத்தினரிடமும் பல அமெரிக்கர்கள் பிணையக் கைதிகளாக பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து

7. பெங்களூருவில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் மேற்கொண்ட ஊர்வலம்

ஆக.28,2014. உலகில் வாழும் பார்வையற்றோரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேலானோர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்ற புள்ளிவிவரம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதுடன், இந்தக் குறையைக் களைய அழைப்பும் விடுக்கிறது என்று அருள் பணியாளர் ஜார்ஜ் கன்னந்தானம் அவர்கள் கூறினார்.
Project Vision என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள் பணியாளர் கன்னந்தானம் அவர்களின் முயற்சியால், கண் தானத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக, பெங்களூரு நகரில் அண்மையில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் அணிதிரண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்கள் பார்வையற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண் தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க, இந்த ஊர்வலத்தை, அடுத்த சில ஞாயிறுகள் தொடர்ந்து அந்நகரில் நடத்த இருப்பதாக அருள்பணி கன்னந்தானம் அவர்கள் கூறினார்.
2013ம் ஆண்டு துவக்கப்பட்ட Project Vision என்ற அமைப்பின் வழியாக இதுவரை 10,000த்திற்கும் அதிகமானோர் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் என்று இவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு கூறுகிறது.
உலகில் வாழும் 3 கோடியே, 90 இலட்சம் பார்வையிழந்தோரில் 1 கோடியே 15 இலட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : UCAN

8. ஜெர்மனியில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நீர்ப் பாலம்

ஆக.28,2014. ஜெர்மனியில் ஆற்றின் மேலேயே கட்டப்பட்டுள்ள நீர்ப் பாலத்தின் மேலே படகு போக்குவரத்து நடைபெறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
உலகில் அமைந்துள்ள மிக நீளமான நீர்ப் பாலம் எனப் புகழ்பெற்ற இது Magdeburg என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பாலத்தை கட்ட 1905ம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 1930ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1942ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இரண்டாம் உலகப் போர் காரணமாகவும், இரு நாடுகளாகக் கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் பிரிந்ததாலும், கட்டுமானப் பணிகளைத் தொடர முடியவில்லை.
கடந்த 1990ம் ஆண்டில் கிழக்கு ஜேர்மனியும், மேற்கு ஜேர்மனியும் ஒன்றாக இணைந்ததால், 1997ம் ஆண்டில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2003ம் ஆண்டில் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்காக பாலம் திறக்கப்பட்டது.
918 மீட்டர் நீளமும், 34 மீட்டர் அகலமும், 4.25 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நீர்ப் பாலம், தற்போது ஜேர்மனியின் தலைநகரான பெர்லினின் உள் நாட்டுத் துறைமுகத்தையும், ரைன் நதி துறைமுகத்தையும் இணைக்கிறது.

ஆதாரம் : TamilWin

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...