Sunday, 1 December 2013

ROBERT JOHN KENNEDY: இந்தியாவின் இயற்கையமைப்பு

ROBERT JOHN KENNEDY: இந்தியாவின் இயற்கையமைப்பு: இந்தியாவின் இயற்கையமைப்பு * ஏறக்குறைய 460 கோடி ஆண்டுகளுக்குமுன் புவி தோன்றியது. ஏறக்குறைய 7 கோடி ஆண்டுகளுக்குமுன் புவியியல் மாறுப...

இந்தியாவின் இயற்கையமைப்பு

இந்தியாவின் இயற்கையமைப்பு

* ஏறக்குறைய 460 கோடி ஆண்டுகளுக்குமுன் புவி தோன்றியது. ஏறக்குறைய 7 கோடி ஆண்டுகளுக்குமுன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.
* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.
* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒற்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.
* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.
* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.
* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம், மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம், இயற்கை வட்டாரம் எனப்படும்.
* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஒரு நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.
* இந்தியாவின் இயற்கையமைப்பை, வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள், வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள், தீபகற்ப பீடபூமிப் பகுதி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள், காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம்வரை கிழக்கு மேற்காக ஏறக்குறைய 2500 கி.மீ. நீளம்வரை சங்கிலித்தொடர் போன்று பரவியுள்ளது. இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து தொடங்குகிறது. பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது.

ஆதாரம் : தினமணி
 

செய்திகள் - 28.11.13

 செய்திகள் - 28.11.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது

2. பிற சமயத்தவருடன் நன்மதிப்பையும் நட்பையும் ஊக்குவிக்க திருத்தந்தை அழைப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தைக்கு திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம்

4. நாட்டு ந‌ல‌னுக்காக‌ இந்திய‌க் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சிற‌ப்புச் செப‌ம்

5. மால்ட்டாவில், குடியேற்றதாரர் குறித்த ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கருத்தரங்கு

6. கென்யாவில் இனமோதல்களை முடிவுக்குக்கொணர அரசின் தலையீட்டை வேண்டியுள்ளார் அந்நாட்டு ஆயர்

7. இலங்கையில் போர்க்கால இழப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் ஆரம்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது

நவ.28,2013. இறைவனை வழிபடுவதைத் தடைசெய்யும் மற்றும் மதம், ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்று சொல்லும் உலக சக்திகள்மீதும், தீமையின்மீதும் கிறிஸ்து அடைந்த வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவழிபாட்டு ஆண்டின் நிறைவு வாசகங்கள் இந்நாள்களில் நமக்கு வழங்கும் இறைவனுக்கும் அலகைக்கும் இடையே நடக்கும் இறுதிப் போராட்டம் குறித்து, இவ்வியாழன் காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவனைத் தோற்கடிக்க விரும்புவரின் கவர்ச்சிகளுக்குள் ஈர்க்கப்படும் பெரும் ஆபத்தான சோதனை குறித்துப் பேசிய திருத்தந்தை, இயேசு பாலைவனத்திலும், பொதுவாழ்விலும், சிலுவையிலும் எதிர்கொண்ட பற்பல சோதனைகள், அவமானங்கள், பழிபாவங்கள் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு, அமைதியின் இளவரசரின் உயிர்ப்பில் உலகின் இளவரசரின் போர் தோல்வி கண்டது எனக் கூறினார்.
உலகின் இறுதிநேரத்தில் அமைதியின் இளவரசர் வந்து உலகின் தலைவராக இருப்பார் என்றும் கூறிய திருத்தந்தை, இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள, இறைவாக்கினர் தானியேல், அரசரை வழிபட மறுத்ததால் சிங்கக் குகையில் போடப்பட்டது பற்றியும் பேசினார்.
இந்த அருவெறுப்பான செயலை, இறைவழிபாட்டுத் தடை எனப் பெயரிடலாம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், சித்ரவதைகளை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்கள் நம் அனைவருக்கும் நிகழவிருப்பதன் முன்னடையாளமாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நாம் அஞ்சக் கூடாது, இயேசு நம்மிடம் பிரமாணிக்கத்தையும் பொறுமையையும் மட்டுமே கேட்கிறார், இறுதிவரை இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருந்த தானியேல் போன்று நாம் உறுதியாய் இருக்குமாறு இயேசு கேட்கிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பிற சமயத்தவருடன் நன்மதிப்பையும் நட்பையும் ஊக்குவிக்க திருத்தந்தை அழைப்பு

நவ.28,2013. உலகின் வருங்காலம் பன்மைத்தன்மையை மதித்து ஒன்றிணைந்து வாழ்வதில் அடங்கியுள்ளது என்பதால், சமய சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை, அதன் அனைத்துக் கூறுகளோடும் ஏற்பது இன்றியமையாதது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழனன்று நிறைவடைந்த திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 50 பிரதிநிதிகளை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது என்பதால், திருஅவை அண்மைக் காலமாக இதற்காகத் தன்னை அர்ப்பணித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
சமுதாயத்தில் பல்வேறு மரபுகளைக்கொண்ட மதங்களின் உறுப்பினர்கள்என்ற தலைப்பில் இவ்வவை நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு ஆற்றிய உரையில்குடிபெய‌ர்வுக‌ள் அதிக‌ம் அதிக‌மாக‌ இட‌ம்பெற்றுவ‌ரும் இந்நாள்க‌ளில், ப‌ல்வேறு க‌லாச்சார‌ங்க‌ள், ம‌த‌ங்க‌ள் ம‌ற்றும் பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளுக்குத் த‌ன்னைத் திற‌ந்த‌தாக‌ச் செய‌ல்ப‌ட‌வேண்டிய‌ ச‌வாலை க‌த்தோலிக்க‌த் திருஅவை எதிர்நோக்குகின்ற‌து என‌வும் கூறினார் திருத்த‌ந்தை பிரான்சிஸ்.
ம‌க்க‌ள் ஒன்றிணைந்து வாழ்வ‌த‌ற்குப் ப‌ல‌வேளைக‌ளில் அச்ச‌ம் த‌டையாக‌ இருக்கிற‌து என்ப‌தையும் சுட்டிக்காட்டிய‌ திருத்த‌ந்தை, அச்ச‌த்தை மேற்கொள்வ‌த‌ற்கு பேச்சுவார்த்தைக‌ளை ஊக்குவிக்க‌வேண்டிய‌து அவ‌சிய‌ம் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


3. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தைக்கு திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம்

நவ.28,2013. இறைவன் நம்மிடம் பேசும்போது அவரின் வார்த்தைக்கும், அவரின் வியப்புகளுக்கும் திறந்தமனம் கொண்டவர்களாக இருப்பதற்கு முயற்சிப்போம் என இவ்வியாழக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் டுவிட்டரில் குறுஞ்செய்திகளை எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இறையன்பு, இறைவனின் கருணை குறித்து அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். 
மேலும், Antilles தீவு நாடுகளுக்கு இவ்வெள்ளி முதல் வருகிற டிசம்பர் 4ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நாட்டு ந‌ல‌னுக்காக‌ இந்திய‌க் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் சிற‌ப்புச் செப‌ம்

நவ.,28, 2013. பாவங்களுக்கு மனம் வருந்தும் நோக்கிலும், நாட்டின் நலனுக்காகவும் வரும் சனிக்கிழமையன்று இந்தியாவின் ஆயிரம் இடங்களில் செபக்கூட்டங்கள் இடம்பெறும் என தலத்திருஅவை அறிவித்துள்ளது.
அனைத்து மக்களுக்காகவும், குறிப்பாக அதிகாரத்திலிருப்போருக்காகச் செபிக்கவேண்டும் எனற விவிலியப் போதனைகளுக்கு இயைந்தவகையில், இந்தியாவில் ஒன்றிணைந்த கிறிஸ்தவ செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுநலனுக்கான சேவை, கல்வி, நலஆதரவு, ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவைகளில் பங்களிப்பு மூலம் நாட்டுநலனுக்கான தங்கள் அன்பை வெளிப்படுத்திவரும் கிறிஸ்தவ சமூகம், இம்மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நாட்டு நலனுக்கான கூட்டுச் செபத்தை மேற்கொள்ளும் என டில்லி உயர்மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
நாடு வளர்ச்சி கண்டுவரும் அதேவேளை, அரசியலில் ஊழல், கௌரவக்கொலைகள், சாதிகளிடையே மற்றும் மதங்களிடையே மோதல்கள் போன்றவையும் அதிகரித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், நல்லவைகளைக் காத்துக்கொள்ள இறைவனின் தலையீட்டை வேண்டி சிறப்பு செபவழிபாட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆதாரம் : CBCI

5. மால்ட்டாவில், குடியேற்றதாரர் குறித்த ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கருத்தரங்கு

நவ.28,2013. குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்கென ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணிக் குழுக்களின் தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும் மால்ட்டாவில் வருகிற டிசம்பர் 2 முதல் 4 வரை கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.
குடியேற்றதாரரும், புலம்பெயர்ந்தோரும் முன்வைக்கும் சவால்கள், இவ்விவகாரம் குறித்த ஆயர் பேரவைகளுக்கு இடையே ஒத்துழைப்பு, குடியேற்றதாரருக்குப் பொறுப்பான தேசிய இயக்குனர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவர்களின் அனுபவங்கள், குடியேற்றதாரர் குறித்த கொள்கைகள் போன்றவை இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும். 
மால்ட்டாவின் La Valletta பேராயர் Paul Cremonaவின் அழைப்பின்பேரில் அந்நகரில்  நடைபெறும் இரண்டு நாள் கருத்தரங்கில், குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் சிறந்த மேய்ப்புப்பணியாற்றும் வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கென்யாவில் இனமோதல்களை முடிவுக்குக்கொணர அரசின் தலையீட்டை வேண்டியுள்ளார் அந்நாட்டு ஆயர்

நவ.28,2013. கென்யாவின் வ‌ட‌மேற்குப‌குதியில் இன‌ங்க‌ளிடையே இட‌ம்பெற்றுவ‌ரும் மோத‌ல‌க‌ளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் எரிசக்தி எண்ணெய்வளம் இருப்பதாக கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அப்பகுதியிலுள்ள Turkana மற்றும் Pokot சமூகங்களிடையே நிலஉரிமைகள் குறித்த மோதல்கள் அதிகரித்திருப்பது குறித்த கவலையை வெளியிட்ட கென்யாவின் Lodwar மறைமாவட்ட ஆயர் Dominic Kimengich, எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டது, மோதல்களுக்கான காரணம் என்பதை மறுக்க முடியாது என்றார்.
மேய்ச்சல் நிலங்கள் இன்மையாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் துன்புறும் கென்யாவின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய்வளக் கண்டுபிடிப்பிற்குப்பின்னர் வருமானம் குறித்த சிந்தனையால் மோதல்கள் துவங்கியுள்ளன எனவும் எடுத்துரைத்தார் ஆயர் Kimengich.

ஆதாரம் : CNS

7. இலங்கையில் போர்க்கால இழப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் ஆரம்பம்

நவ.,28, 2013. இலங்கையில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்த போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள், உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிவரங்கள் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து நாடு தழுவிய அளவில் இந்தக் கணக்கெடுப்பை இவ்வியாழன் முதல் தொடங்கியுள்ளன.
அந்த நாடு தழுவியத் திட்டத்தில், தொழில்முறை ரீதியில், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, மோதல்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், சொத்துக்கள் சேதம் ஆகியவை குறித்து நேரடியாகத் தகவல்களைச் சேகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இடம்பெறவுள்ள இந்தக் கணக்கெடுப்பு 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மோதல்கள் காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புகள், சொத்துக்களுக்கான சேதங்கள் ஆகியவை குறித்த விபரங்களைச் சேகரிக்கவுள்ளதாக அரசின் அறிக்கை கூறுகிறது.
போரின் காரணமாக ஏறத்தாழ‌ 90,000 பேர் கைம்பெண்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC

ROBERT JOHN KENNEDY: கத்தரிக்காய்

ROBERT JOHN KENNEDY: கத்தரிக்காய்: கத்தரிக்காய் பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளன. மேலும் ஃபைபர் 11 விழுக்காடு , மாங்கனீசு 10 விழுக்காடு ...

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளன. மேலும் ஃபைபர் 11 விழுக்காடு, மாங்கனீசு 10 விழுக்காடு, பொட்டாசியம் 5.3 விழுக்காடுஃபோலேட் 4.5 விழுக்காடு, வைட்டமின் கே 3.5 விழுக்காடுசெம்பு 3.5 விழுக்காடு, டிரிப்தோபன் 3.1 விழுக்காடு, வைட்டமின் சி 3 விழுக்காடு, மெக்னீசியம் 2.8 விழுக்காடுவைட்டமின் பி 32.6 விழுக்காடு, கலோரி 1 விழுக்காடு ஆகிய சத்துக்களும் கத்தரிக்காயில் உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மேலும் உடல்சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். தோல் நோயாளிகள், புண், ஒவ்வாமை உள்ளவர்கள் இக்காயைச் சாப்பிடக்கூடாது. இதனைச் சாப்பிட்டால் ஒவ்வாமை அதிகமாகும், அரிப்பையும் தூண்டும். அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், முதல் மூன்று மாதங்களுக்கு கத்தரிக்காயைச் சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய்,  பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த கத்தரிக்காயைப் பயன்படுத்துகின்றனர்.  இக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலைக் குறைக்கும். கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆதாரம் : தினகரன்

செய்திகள் - 27.11.13

செய்திகள் - 27.11.13
------------------------------------------------------------------------------------------------------
1. Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை
2. லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்குத் திருஅவையின் நலவாழ்வுப் பணி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைத்தூது அறிவுரை ஏடு, திருஅவையின்     வருங்காலத்தின் வரைபடம், திருப்பீட அதிகாரிகள்
4. திருஅவை, 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது, காரித்தாஸ் தலைவர்
5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், ஆன்மப் பரிசோதனை செய்ய வைக்கின்றன, நியுயார்க் கர்தினால்
6. லிபியாவில் அமைதி ஏற்படும், ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி நம்பிக்கை
7. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் படுகொலை
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் மனித உரிமை மீறல்கள், ஐ.நா. எச்சரிக்கை
------------------------------------------------------------------------------------------------------

1. Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை

நவ.27,2013. Rett syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 50 குழந்தைகள், அவர்களின் பெற்றோர் என 170 பேரை திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இப்புதன் பொதுமறைபோதகத்திற்கு முன்னர் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Rett syndrome என்ற உடல் ஆற்றல்கள் மற்றும் மூளை வளர்ச்சிக்குறைவு நோயால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளைச் சந்தித்த திருத்தந்தை, இக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட ஆசீரையும், அவர்களின் பெற்றோருக்கு ஊக்க வார்த்தைகளையும் வழங்கினார்.
ஏற்கனவே கடந்த மாதம் 4ம் தேதி அசிசி நகரிலும், இவ்வாண்டு மேமாதம் 31ம் தேதி தான் தங்கியிருக்கும் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்திலும் Rett syndrome நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1966ம் ஆண்டில்தான் Rett syndrome நோய் குறித்த முழுவிவரங்கள் Andreas Rett  என்பவரால் வெளி உலகுக்குத் தெரியவந்தன. இவர் பெயராலேயே அழைக்கப்படும் இந்நோய்பெரும்பாலும் பெண்குழந்தைகளையே, அதுவும் அவைகள் பிறந்த சில மாதங்களுக்குப்பின் தாக்கத் தொடங்குகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்குத் திருஅவையின் நலவாழ்வுப் பணி

நவ.27,2013. போரால் துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்கு இனம், மதம் என்ற பாகுபாடின்றி உதவுவது, அந்நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நேரிடையான பாதையாக உள்ளது என, திருப்பீட கோர் ஊனும்”(Cor Unum)பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் இராபெர்ட் சாரா கூறினார்.
திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை, உரோம் பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனை, லெபனன் காரித்தாஸ் ஆகிய மூன்றும் இணைந்து,லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்கு நலவாழ்வுப் பணி என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இப்புதனன்று திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்ற நிருபர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய கர்தினால் சாரா, இச்சிறாருக்கு உதவும் இத்திட்டத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள் தூண்டுகோலாய் இருந்தன எனவும் கூறினார்.
கர்தினால் சாரா, பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனை தலைவர் Giuseppe Profiti, இம்மருத்துவமனையின் தோல் பிரிவுத்துறை இயக்குனர் May El Hachem, லெபனன் காரித்தாஸ் தலைவர் அருள்பணி Simon Faddoul ஆகியோர் இந்நிருபர் கூட்டத்தில் பேசினர்.
இத்திட்டத்தின்மூலம், போரினால் துன்புற்றுள்ள சிரியாக் குழந்தைகள் மீண்டும் சிரித்து மகிழவும், தங்கள் வாழ்வில் உடல் மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பெறவும் இயலும் என்றும் கர்தினால் சாரா கூறினார்.
ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் கணிப்புப்படி, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் உள்ளனர், இவர்களில் 7இலட்சம் பேர் லெபனனில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைத்தூது அறிவுரை ஏடு, திருஅவையின் வருங்காலத்தின் வரைபடம், திருப்பீட அதிகாரிகள்

நவ.27,2013. தான் எதிர்நோக்கும் சவால்களை ஏற்கும்அதேவேளை, கடவுளின் அன்பும் அவரின் மேலாண்மையுமே மேலோங்கும் என்பதை திருஅவை அறிந்துள்ளது என்பதை Evangelii Gaudium ஏடு வெளிப்படுத்தியுள்ளது என, திருப்பீட அதிகாரிகள் தெரிவித்தனர்.
"Evangelii Gaudium" அதாவது நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை ஏட்டை இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய திருப்பீட அதிகாரிகள், இவ்வேடு, விசுவாசம் நிறைந்த நம்பிக்கை வாழ்வுக்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினர்.
இந்நிருபர் கூட்டத்தில் பேசிய, நற்செய்தி அறிவிப்பைப் புதிய முறையில் செய்வதை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா, தற்போதைய சவால்களைப் புறக்கணிக்காமல், உண்மைத்தன்மையின் இறைவாக்கு மற்றும் நேர்மறைக் கண்ணோட்டத்தை மீண்டும் கண்டுணர, திருஅவைக்கு அழைப்பு விடுப்பதாக இவ்வேடு உள்ளது என்று கூறினார்.
திருஅவை எப்பொழுதும் மறைப்போதகராக இருக்க வேண்டும் என்றோ அல்லது மறையுரைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ அல்லது திருஅவை முதலில் ஏழைகளுக்குப் பணியாற்றுதல் பற்றியோ அல்லது திருஅவை எப்பொழுதும் கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கும் என்பது குறித்தோ  திருத்தந்தை எழுதும்போது, இந்த அனைத்துத் தலைப்புகளும் கடவுளின் கருணைநிறை அன்பில் கவனம் செலுத்துவதாக உள்ளன என்று கூறினார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
மேலும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீட சமூகத்தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் கிளவ்தியோ சேல்லி, "Evangelii Gaudium" என்ற மறைத்தூது அறிவுரை ஏடு, தனித்துவமிக்க மற்றும் ஆழமான மேய்ப்புப்பணி உணர்வைக் கொண்டுள்ளது என்றுரைத்தார்.
இன்னும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் பேராயர் லொரென்சோ பால்திச்சேரி, நற்செய்தி அறிவிப்பைப் புதிய முறையில் ஆற்றுவது குறித்து 2012ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றப் பரிந்துரைகளைக் கவனத்தில்கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சொந்தப் பாணியில் இவ்வேட்டை அமைத்துள்ளார் என்று கூறினார்.
"Evangelii Gaudium" என்ற மறைத்தூது அறிவுரை ஏட்டின் பெரும் பகுதியை, கடந்த ஆகஸ்டில் கோடை விடுமுறையின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தானே இஸ்பானியத்தில் எழுதினார் என்று திருப்பீடச் செயலர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி இந்நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருஅவை, 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது, காரித்தாஸ் தலைவர்

நவ.27,2013. எய்ட்ஸ் நோயாளிகளுக்கானத் திருஅவையின் கனிவும் ஒருமைப்பாடும் நிறைந்த சேவையை, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆற்றி வருகின்றது என, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிக்கெஸ் மாராதியாகா கூறினார்.
டிசம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் மாராதியாகா, ஏறக்குறைய 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் திருஅவை தனது அன்பின் பணியை ஆற்றி வருகின்றது எனக் கூறினார்.
HIV நோய்க் கிருமிகளால் யாரும் புதிதாகப் பாதிக்கப்படக் கூடாது, எய்ட்ஸ் நோயாளிகளே இருக்கக் கூடாது, இந்நோயாளிகளுக்கு எதிரானப் பாகுபாடுகளே இருக்கக் கூடாது என்ற விருதுவாக்குடன் இந்த 2013ம் ஆண்டின் அனைத்துலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுவதறுகு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளதையும் கர்தினாலின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
திருமணத் தம்பதியர் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக இருப்பது, தனிப்பட்டவர் தனது பாலியல் நடவடிக்கையில் ஒழுக்கமாக இருப்பது, ஒருவர் ஒருவருடனான உறவுகளில் பொறுப்புடன் நடந்துகொள்வது போன்றவை மூலமாக, HIV நோய்க் கிருமிகள் யாரையும் புதிதாகத் தாக்காமல் இருக்கச் செய்யலாம் எனவும் கூறியுள்ளார் கர்தினால் மாராதியாகா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், ஆன்மப் பரிசோதனை செய்ய வைக்கின்றன, நியுயார்க் கர்தினால்

நவ.27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள், மனச்சான்றைப் பரிசோதனை செய்வதாகவும், மனதில் ஆழப்பதித்து தியானிக்கவேண்டியவைகளாகவும் உள்ளன என, அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன் கருத்து தெரிவித்தார்.
Yonkersலுள்ள புனித வளன் குருத்துவ கல்லூரியில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த கர்தினால் டோலன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்று என்ன போதித்தார் என்ற ஆவலுடன், ஏறக்குறைய ஒவ்வொரு நாள் காலையிலும் தான்  கண்விழிப்பதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய கர்தினால் டோலன், அண்மைக் காலத்து மூன்று திருத்தந்தையரும், கிறிஸ்துவின் மறையுடலின் ஆன்மா, மனது மற்றும் இதயத்துக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர் என்றும் கூறினார்.

ஆதாரம் : CNS

6. லிபியாவில் அமைதி ஏற்படும், ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி நம்பிக்கை

நவ.27,2013. லிபியாவில் தற்போது நிச்சயமற்றநிலை காணப்படுகின்றபோதிலும், அந்நாட்டில் அமைதி ஏற்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார் லிபியத் தலைநகர் ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி.
லிபியாவில் அமைதி ஏற்பட வேண்டுமென்று பொதுமக்கள் அழுத்தம் கொடுத்து வருவது, அந்நாட்டில் எந்த நேரத்திலும் அமைதி வெடிக்கலாம் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஆயர் மார்த்தினெல்லி.
பென்காசி மற்றும் ட்ரிப்போலி நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பல்வேறு புரட்சிக்குழுக்கள் அந்நகரங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்று இம்மாதம் 15ம் தேதி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டது பற்றிக் கூறிய ஆயர் மார்த்தினெல்லி, இந்தப் புரட்சிக்குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அவ்விடங்களைவிட்டு வெளியேறுவதன்மூலம், பாதுகாப்புப் படையினர் தங்களது நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்தப் பொது மக்கள் போராட்டங்களில் 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பென்காசியில் இசுலாமிய புரட்சிப்படைக்கும், இராணுவத்துக்கும் இடையே இத்திங்களன்று இடம்பெற்ற மோதலில் 9 பேர் இறந்தனர் மற்றும் 51 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : Fides
                              
7. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் படுகொலை

நவ.27,2013. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காக அதிக அளவில் தாய்மார்கள் கொல்லப்பட்டுவரும்வேளை, கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் வரை இக்காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் இத்திங்களன்று தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு எதிராக அமிலம் வீசிய 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், பாலியல் வன்செயலில் 344 வழக்குகளும், மற்ற வன்முறைச் சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மகளிர்க்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு APWA என்ற அனைத்து பாகிஸ்தான் மகளிர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய ரஹ்மான், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காகத் தாய்மார்களைக் கொலைசெய்யும் ஒரு நாடு, நன்னெறிசார்ந்த சமூகம் என அழைக்கப்பட தகுதியற்றது எனவும் குறை கூறினார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்குத்தான் முக்கியத்துவம்
அளிக்கப்படுகின்றது.

ஆதாரம் : LifeNews

8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கடும் மனித உரிமை மீறல்கள், ஐ.நா. எச்சரிக்கை

நவ.27,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் முடியாட்சிக்குரிய நடவடிக்கைகள் அதிகரித்துவரும்வேளை, அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆப்ரிக்க ஒன்றியம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அனைத்துலக சமுதாயம் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகள் அமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் பேசிய ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் யான் எலயாசன், அந்நாட்டின் அரசுத்தலைவரை, பரட்சிக்குழுக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றிய கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்நாடு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது என்றும் கூறினார்.
கொலைகள், சித்ரவதைகள், பாலியல் வன்செயல்கள், சிறாரைப் படைக்குக் கடத்துவது உட்பட அந்நாடு கடும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டு வருவதாகவும் எலயாசன் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் 46 இலட்சம் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடும் உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை, இன்னும் நலவாழ்வுப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் எலயாசன் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Requiem Mass and Tomb Blessing of my paternal uncle Mr. Louis Xavier ar Maravankudieruppu Parish - 30/11/13









போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...