Saturday 25 February 2023

அரசியலமைப்புச் சட்டத்தை மீற வேண்டாம் : கர்தினால் இரஞ்சித்.

 


தேசத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து வரவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமையாகும்: கர்தினால் இரஞ்சித்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால், அனைத்துலகச் சமூகத்திடமிருந்து இலங்கை அரசு, தான் பெற்றுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

மார்ச் 9-ஆம் தேதி நாட்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளை, இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், இத்தகைய நிலை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

திவால்நிலை மற்றும் உலக வங்கி, IMF மற்றும் வெளிநாடுகளின் உதவியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள வேளை, நாட்டை ஒரு பெரிய நெருக்கடிக்குத் தள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

உள்ளாட்சித் தேர்தல் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை கவனிக்க வேண்டியது அரசுத் தலைவரின் கடமை என்பதைத் தான் அவருக்கு நினைவூட்ட விரும்புவதாகவும், இந்த நடவடிக்கையில் அரசுத்தலைவரும், அரசு ஊழியர்களும் தங்களின் கடமையைச் செய்யத் தவறினால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.

தேசத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து வரவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமையாகும்," என்று மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் இரஞ்சித். (ASIAN)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...