Sunday, 22 December 2013

ROBERT JOHN KENNEDY: இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியம...

ROBERT JOHN KENNEDY: இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியம...: இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியமனம் Source: Tamil CNN  தென்அமெரிக்காவில் உள்ள டெக...

இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியமனம்

இந்தியப் பெண் டெக்ஸாஸ் மாநில தலைமை அதிகாரியாக நியமனம்

Source: Tamil CNN 
தென்அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைமை செயலாளராக இந்திய வம்சாவளி பெண்மணியான நந்திதா பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தனது 21-வது வயதில் வெறும் 200 டொலர்களுடன் அமெரிக்காவிற்கு சென்ற நந்திதா பெர்ரி, எப்படியாவது வக்கீல் ஆகிவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் சிரமப்பட்டு படித்து பட்டமும் பெற்றார்.அதன் பின்னர், வெற்றிகரமான வக்கீல்களில் ஒருவராக தனது நிலையை உயர்த்திக் கொண்ட அவர், டெக்ஸாஸ் மாநில அரசின் அட்டார்னியாகவும் பணியாற்றினார்.
அவரது கடும் உழைப்பு மற்றும் செயல்திறனில் திருப்தியடைந்த டெக்ஸாஸ் கவர்னர், மாநிலத்தை நிர்வகிக்கக் கூடிய மிக உயர்ந்த பெரும் பொறுப்பில் அவரை நியமித்து கவுரவித்துள்ளார்.மாநிலத்தின் அலுவல்கள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை பாதுகாத்தல், மாநில அரசு இயற்றும் புதிய சட்ட திட்டங்களை அரசிதழில் (கெஸட்) பதிப்பித்தல், மாநில ஆட்சியின் தலைவராக கருதப்படும் கவர்னரின் சார்பில் முக்கிய ஆவணங்களில் கையொப்பமிடுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, நந்திதா பெர்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.இது தவிர, டெக்ஸாஸ் மாநிலத்தின் தேசிய, சர்வதேச பிரச்சினைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது, அம்மாநில தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவது மற்றும் அண்டை மாநிலமான மெக்சிக்கோவின் எல்லை பிரச்சினை தொடர்பாக கவர்னரின் சார்பில் செயல்படுவதும் இவரது கூடுதல் பணிகளாகும்.
இவரது கணவர் மைக்கேல் பெர்ரி, ஹுஸ்டன் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். வரும் ஜனவரி மாதம் 7-ம் திகதி இந்த பதவியை நந்திதா பெர்ரி ஏற்றுக் கொள்கிறார்.


ROBERT JOHN KENNEDY: தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்...

ROBERT JOHN KENNEDY: தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்...: தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை Source: Tamil CNN இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என்பதை...

தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை

தமிழ் மொழியை ஓரங்கட்டி சீன மொழியை அரவணைக்கும் இலங்கை

Source: Tamil CNN
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என்பதை விளம்பர, பெயர்ப்பலகைகள் கூட உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சீனாவின் ஆதிக்கமும், சீன மொழியும் வியாபித்து வந்தாலும், தமிழ் மொழி இங்கே ஓரங்கப்பட்டப்படுவது தமிழர்கள் மத்தியில் மனவேதனையையும், அதிருப்தியையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் நாலாபக்கமும் சீன மொழியும், சீன சந்தைகளும், சீனர்களும் நாளுக்கு நாள் வியாபித்து வருகின்றனர். குறிப்பாக சாதாரண அறிவித்தல் பலகைகளில்கூட சீன மொழி இடம்பிடிக்கும் அளவிற்கு ஆதிக்கம் வலுவடைந்து வருகிறது.
இதற்கு தெற்கின் கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகை சாட்சியாக இருக்கிறது. சீனர்களின் இனப்பரம்பல் அதிகரித்து வருவதை இது சித்தரிப்பதாகக் கூறப்படுகிறது.
சீனர்கள் அதிகம் வரும் கடற்கரையாக இருந்தால் சீன மொழியும் அறிவித்தல் பலகையில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துபவர்கள், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கான விளக்கத்தையும் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் முதற்படியாக மொழிக் கொள்கை அமைந்துள்ளது. இலங்கையில் மும்மொழிக் கொள்கை இருந்துவரும் நிலையில், இவ்வாறு விளம்பரம் அல்லாத பொது அறிவித்தல் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி ஆக்கிரமித்துள்ளமையானது எதிர்கால இலங்கையின் நிலை குறித்து தெளிவாக எடுத்தியம்புகிறது.
மூன்றாவதாக எழுதப்பட்டுள்ள சீன மொழி, எதிர்காலத்தில் முதல்நிலைக்கு வரும் நிலை ஏற்படும் என்பதுடன் அடுத்த 50 வருடங்களில் சீனர்கள் இலங்கையின் அரசியலில் நேரடியாக தடம்பதிக்கும் நிலையையும் எவரும் தடுக்க முடியாது என்பது திண்ணமாகும்.
chines_langue_001

ROBERT JOHN KENNEDY: 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்...

ROBERT JOHN KENNEDY: 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்...: 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குதண்டனை Source: Tamil CNN  கர்நாடகா மங்களூரு மா...

20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குதண்டனை

20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குதண்டனை

Source: Tamil CNN 
கர்நாடகா மங்களூரு மாவட்டம் பண்ட்வால் தாலுகா கண்யானா பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார்(வயது 46 )இவர், 1990 முதல் கண்யானா அங்கடி அருகில், பிரைமரி பள்ளியில், தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். 2003ல் வேலையை விட்ட மோகன், அதன் பின்னர், சட்ட விரோத செயல்களில் ஈடுபட துவங்கினார். பெண் களை ஏமாற்றி, பஸ் நிலைய கழிப்பறையில், சயனைடு கொடுத்து அவர்களை சாகடிப்பதை, வழக்க மாக கொண்டிருந்தார். சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல் 20 பெண்களை அவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், மோகனை கைது செய்தனர்.
மங்களூரு நான்காவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம், அனிதா, லீலாவதி, சுனந்தா ஆகிய பெண்களை கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி நாயக், ‘’இவ்வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. இதில், குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிக பட்ச தண்டனையான, தூக்கு தண்டனை விதிப்பதே சரியானது.
விசாரணையின் போது, தான் தவறு செய்ததற்காக அவர் வருந்தவில்லை. பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு, தன் பணிக்கு மரியாதை கொடுக்கவில்லை.
இவர் செயல் பட்ட முறையை பார்த்தால், திட்டமிட்டே கொலை செய்து திருமணமாகாத மூன்று பெண்களை கற்பழித்துள்ளார். அவர்கள் மீது பகை யுடன் திடீரென கொலை செய்யவில்லை. மோகனின் குற்றச்செயல், நீதிமன்ற துறையையும் சமூகத்தையும் அதிர்ச்சி அளிக்கிறது’’என்று தீர்ப்பளித்துள்ளார்.


ROBERT JOHN KENNEDY: நைஜீரியாவின் மகப்பேறு தொழிற்சாலையில் அடைத்து வைக்க...

ROBERT JOHN KENNEDY: நைஜீரியாவின் மகப்பேறு தொழிற்சாலையில் அடைத்து வைக்க...: நைஜீரியாவின் மகப்பேறு தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டனர் Source: Tamil CNN ...

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...