Tuesday, 26 November 2013

ROBERT JOHN KENNEDY: பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டி...

ROBERT JOHN KENNEDY: பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டி...: பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி Source: Tamil CNN தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ...

பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி

பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி

Source: Tamil CNN
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபாகரனின் பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த ஏனைய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரனின் போராட்டமானது நியாயமானது எனவும், அதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒர் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் சிங்கத் தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீதரனின் உரைக்கு, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீதரன் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்டிலிருந்து நீக்கிவிடுமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

ROBERT JOHN KENNEDY: ராக்கெட் அனுப்புவதற்கு முன் திருப்பதி கோவிலில் பூஜ...

ROBERT JOHN KENNEDY: ராக்கெட் அனுப்புவதற்கு முன் திருப்பதி கோவிலில் பூஜ...: ராக்கெட் அனுப்புவதற்கு முன் திருப்பதி கோவிலில் பூஜை செய்வது முட்டாள்தனம் : விஞ்ஞானி ராவ் பேட்டி Source: Tamil CNN சென்ற ...

ராக்கெட் அனுப்புவதற்கு முன் திருப்பதி கோவிலில் பூஜை செய்வது முட்டாள்தனம் : விஞ்ஞானி ராவ் பேட்டி

ராக்கெட் அனுப்புவதற்கு முன் திருப்பதி கோவிலில் பூஜை செய்வது முட்டாள்தனம் : விஞ்ஞானி ராவ் பேட்டி

Source: Tamil CNN
சென்ற வாரம் மத்திய அரசு சச்சின் டெண்டுல்கர், மற்றும் விஞ்ஞனி சி.என்.ராவ் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது.
பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி ராவ், நேற்று பெங்களூரில் அளித்த பேட்டி ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விஞ்ஞானி ராவ், இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் சாடிலைட் குறித்த ஒரு கேள்விக்கு, ஒவ்வொரு ராக்கெட்டை அனுப்பும்போதும் திருப்பதிக்கு சென்று பூஜை செய்வது என்பது மூடநம்பிக்கையாகும். விஞ்ஞானிகள் கடவுளையும், ஜோசியத்தையும் நம்புவதை கைவிட்டு, தங்கள் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அறிவியல் துறைக்கு போதிய நிதி ஒதுக்காமல் அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக ஆட்சி செய்கின்றனர். அறிவியல் துறையில் முன்னேறாமல் இந்தியா வல்லரசு ஆக முடியாது என்று கூறினார்.
தான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் இல்லை என்றும், சீனா பொன்று இந்தியாவும் அறிவியல் துறையில் அதிகளவு முதலீடு செய்து உலக வல்லரசு வரிசையில் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதே தனது நீண்டநாள் கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.
திருப்பதி கோவில் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் அவர் அளித்த பேட்டி, கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இணையதளங்களில் அவருடைய கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ROBERT JOHN KENNEDY: பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபி...

ROBERT JOHN KENNEDY: பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபி...: பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபிக் போலீஸ் : அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் Source: Tamil CNN அமெரிக்க...

பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபிக் போலீஸ் : அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்த டிராபிக் போலீஸ் : அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

Source: Tamil CNN
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள SAN ANTONIO – என்ற நகரில் ஒரு டிராபிக் போலீஸ் அதிகாரி பணியில் இருந்தபோது 19 வயது இளம்பெண்ணை தனது காருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்த அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
டெக்ஸாஸ் மாநிலத்தில் SAN ANTONIO – நகரில் டிராபிக் போலீஸ் அதிகாரியாக Jackie Neal, என்பவர் ஏழு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பணியில் இருந்தபோது, அந்த வழியே வந்த 19 வயது இளம்பெண்ணை மறித்து, தனது காருக்குள் இழுத்து சென்று பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இந்த விஷயத்தை வெளியே கூறினார், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னுடைய பெற்றொர்களுடன் விஷயத்தை கூறி காவல்துறையினர்களிடம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீசார் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மைதான் என்று மருத்துவ சான்றிதழ் கிடைத்ததன் அடிப்படையில் டிராபிக் போலீஸ் அதிகாரி Jackie Neal ஐ அதிரடியாக கைது செய்தனர். அவர் பணியில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

ROBERT JOHN KENNEDY: Are our expectations of Pope Francis unrealistic?

ROBERT JOHN KENNEDY: Are our expectations of Pope Francis unrealistic?: Are our expectations of Pope Francis unrealistic? Writer argues that a 'slimmed-down, democratic Church' has never existed. ...

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...