Thursday, 1 July 2021

தோண்டத் தோண்ட கிடைக்கும் பொக்கிஷம்..! ஆய்வாளர்கள் உற்சாகம் | | Archaeolo...

கீழடி அகழாய்வில் சுடுமண் கிண்ணங்கள் அதிகளவில் கண்டெடுப்பு! | mud bowl fo...

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் 2-வது பாகம் | Rajendra Cholan |...

கீழடி அகழாய்வில் சமதள மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு | Human skeletal ...

கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி மையம் |...

இந்தியாவின் Port Blair மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

 


சென்னையின் அண்ணாமலைபுரத்தில் பிறந்த அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள், Port Blair மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தலைநகரான Port Blair மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்களை, ஜுன் 29, செவ்வாய்க்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி சென்னை, அண்ணாமலைபுரத்தில் பிறந்த அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள், சென்னை சாந்தோம் இளங்குருமடத்திலும், சென்னை திரு இருதயக் குருத்துவக் கல்லூரியிலும் பயின்றபின், இராஞ்சி புனித ஆல்பர்ட் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியிலும் படித்து, 1994ம் ஆண்டு, Port Blair மறைமாவட்டத்திற்கு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

மறைமாவட்ட நிர்வாகப்பணிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள், 2020ம் ஆண்டு முதல் Port Blair  மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இருந்து வருகிறார்.

முன்னாள் ஆயர் Aleixo das Neves Dias அவர்கள், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி பணி ஒய்வு பெற்றதைத் தொடர்ந்து, Port Blair மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.

 

ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப்பின் திருச்சிக்கு புதிய ஆயர்

 

திருச்சி புனித பவுல் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் அதிபர், அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ், திருச்சியின் புதிய ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1954ம் ஆண்டு பிறந்து, திருச்சி மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்களை, அம்மறைமாவட்டத்தின் ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 29, செவ்வாயன்று நியமித்துள்ளார்.

திருச்சி மறைமாவட்டத்தின் லாலாபேட்டை என்ற ஊரில் 1954ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி பிறந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்கள், பெங்களூருவிலும், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசிலும் கல்வி பயின்றுள்ளார்.

1981ம் ஆண்டு சனவரி 8ம் தேதி அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், சில பங்குத்தளங்களிலும், தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டு பணிக்குழுவின் செயலராகவும், திருச்சி புனித பவுல் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள், 2018ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பணி ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து, ஆயரின்றி இருந்த அம்மறைமாவட்டத்திற்கு, அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்கள் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

புனித மரியா பேராலயம், திருச்சி
புனித மரியா பேராலயம், திருச்சி

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...