Friday, 9 January 2015

செய்திகள் - 09.01.15

செய்திகள் - 09.01.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - தூய ஆவி நம் இதயங்களை இறைவனின் அன்புக்குத் திறக்கிறார் 

2. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் திருத்தூது ஏடு

3. திருத்தந்தை, யஜிதி இனப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

4. ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவு, வத்திக்கானில் கூட்டம்

5. இலங்கையின் புதிய அரசுத்தலைவர் நியாயமாகச் செயல்படுவார், தலத்திருஅவை நம்பிக்கை 

6. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் உள்ளது, ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள்

7. ப்ரெயில் எழுத்தில் விவிலியப் பிரதிகள்

8. உலகில் இன்னும் 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - தூய ஆவி நம் இதயங்களை இறைவனின் அன்புக்குத் திறக்கிறார் 

சன.09,2015. ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளோ, யோகா அமர்வுகளோ அல்லது சென் ஆன்மீகப் பயிற்சிகளோ அல்ல, ஆனால் தூய ஆவியே நம் இதயங்களை இறைவனுக்கும், அவரின் அன்புக்கும் திறக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு கடலில் நடந்து வருவதைக் கண்ட திருத்தூதர்கள் எவ்வாறு அச்சம் கொண்டனர் என்பதைக் கூறும் இவ்வெள்ளி திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, திருத்தூதர்களின் இதயங்கள் கடினப்பட்டு இருந்ததே அவர்கள் பயந்து நடுங்கியதற்கான காரணம் என்று கூறினார்.
இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒருவரின் வாழ்வில் ஏற்பட்ட வேதனையான அனுபவம் போன்று, ஒருவரின் இதயத்தைக் கடினப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும், அதோடு மனிதர் தங்களுக்குள்ளே வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்களின் இதயங்கள் கடினப்படும் என்றும் கூறினார்.
வீண் தற்பெருமை, தன்னிறைவு, பாதுகாப்பற்றநிலை போன்ற காரணங்களாலும் ஒருவரின் இதயம் கல்லாக மாறும் என்றும், இதயம் கல்லாக மாறும்போது அது சுதந்திரமாக இருக்காது, அப்போது அதனால் அன்புகூர முடியாது, நிறைவான அன்பு அச்சத்தை அகற்றுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
அன்புகூருவது எவ்வாறு என்பதையும், நம் கடின இதயங்களிலிருந்து நாம் விடுதலையடையவும் தூய ஆவி நமக்குக் கற்பிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நீங்கள் ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளையும், ஆயிரக்கணக்கான யோகா அமர்வுகளையும், ஆயிரக்கணக்கான சென் ஆன்மீகப் பயிற்சிகளையும்  பின்பற்றலாம், ஆனால் இவற்றில் எதுவுமே நீங்கள் கடவுளின் குழந்தை என்ற சுதந்திரத்தை உங்களுக்கு வழங்க இயலாது, மாறாக, தூய ஆவி ஒருவரே கடவுளை, அப்பா என அழைப்பதற்கு உதவுகிறார் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் திருத்தூது ஏடு

சன.09,2015. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது ஏடு இந்த ஆண்டு கோடை காலத்துக்குள் வெளியிடப்படக்கூடும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
வருகிற திங்கள் இரவு 7 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கும் இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கானத் திருத்தூதுப் பயணம் பற்றி பத்திரிகையாளர்களிடம் விளக்கியபோது சுற்றுச்சூழல் பற்றிய இத்திருத்தூது ஏடு பற்றியும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
சுற்றுச்சூழல் பற்றிய திருத்தூது ஏடு இன்னும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறிய அருள்பணி லொம்பார்தி, சுற்றுச்சூழல் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிப் பேசி வருவதையும் குறிப்பிட்டார்.
எனினும், இத்திருத்தூது ஏட்டைத் தயாரிப்பதற்கு அதிக காலம் தேவைப்படுவதால், இது வருகிற கோடை காலத்துக்குள் வெளியிடப்படக்கூடும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை, யஜிதி இனப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

சன.09,2015. பிற சிறுபான்மை இனத்தவர் போன்று வன்முறையையும் அடக்குமுறையையும் சந்திக்கும் யஜிதி இனத்தவர்க்கு நீதியும், சுதந்திரமும் அமைதியும் கிடைக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல இடங்களில் வாழும் யஜிதி இனத்தவரின் பிரதிநிதி குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்காலத்தில் பல்வேறு துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் யஜிதி இன மக்களுடன் ஆன்மீக முறையில் தான் நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இக்குழுவில் ஒருவர் திருத்தந்தையை, ஏழைகளின் தந்தை என அழைத்தார் என்றும், இவ்வின மக்களுக்கு திருத்தந்தை வழங்கிவரும் ஆதரவுக்கு இக்குழுவினர் நன்றி தெரிவித்தனர் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உலகின் யஜிதி இன மக்கள் தலைவர் Tahsin Said Ali Beg, அவ்வினத்தவரின் ஆன்மீகத் தலைவர் Skeikh Kato ஆகிய இருவர் தலைமையிலான குழு திருத்தந்தையைச் சந்தித்தது.  இந்த ஆன்மீகத் தலைவர் Baba Sheikh என அழைக்கப்படுகிறார்.
உலகில் ஏறக்குறைய 15 இலட்சம் யஜிதி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஐந்து இலட்சம் பேர் ஈராக்கிலும், மற்றவர்கள் துருக்கி, ஜார்ஜியா, ஆர்மேனியா, இன்னும் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவு, வத்திக்கானில் கூட்டம்

சன.09,2015. கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு, வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வு : ஹெய்ட்டியில் நிலநடுக்கம் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் அதன் நினைவுகளும் நம்பிக்கையும் என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தின் ஒரு நிகழ்வாக இதில் பங்கு கொள்ளும் பிரதிநிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்திப்பார்கள்.
திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அமைப்பு, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை, ஹெய்ட்டி ஆயர்கள் பேரவை ஆகியவற்றின் முயற்சியினால் நடத்தப்படும் இக்கூட்டத்தில் 200 பேர் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
2010ம் ஆண்டு சனவரி 12ம் தேதி ஹெய்ட்டியில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர், மூன்று இலட்சம் பேர் காயமடைந்தனர் மற்றும் 12 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
இந்த நிவாரணப் பணியில் திருஅவையின் முயற்சியினால் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, இன்னும் ஏறக்குறைய 200 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்று ஹெய்ட்டி கர்தினால் Chibly Langlois அவர்கள் கூறினார். வத்திக்கானில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கென ஹெய்ட்டிலிருந்து 12 பேர் உரோம் வந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இலங்கையின் புதிய அரசுத்தலைவர் நியாயமாகச் செயல்படுவார், தலத்திருஅவை நம்பிக்கை 

சன.09,2015. இலங்கையில் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள், நாட்டினர் அனைவரும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உதவுவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
இலங்கையில் இவ்வியாழனன்று நடந்து முடிந்த அரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் 51.28 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது குறித்து வத்திக்கான் வானொலிக்குத் தொலைபேசி பேட்டியளித்த யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் இடம்பெறும் ஆட்சி மாற்றம், நாட்டினர் எல்லாரும், குறிப்பாக தமிழ் மக்கள் சுதந்திரமாகக் கடமைகளை ஆற்றுவதற்கும், ஒற்றுமையாகச் செயல்படுவதற்கும் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.
புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களை அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது என்றும், இவர் தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், ஆயினும், மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் நியாயத்தோடு செயல்படுவதாக உறுதி அளித்திருக்கிறார் என்றும் கூறினார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ்.
இலங்கையின் ஏழாவது அரசுத்தலைவர் தேர்தலில் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் 57 இலட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகளுடன், 47.58 விழுக்காட்டு வாக்குகளையே ஆளுங்கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் உள்ளது, ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள்

சன.09,2015. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் வைக்கப்படுகின்றது என்றும், மதங்களை மதிக்கும் தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டுமென்றும் பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் தலைவர்கள் கூறினர்.
ப்ரெஞ்ச் ஆயர்கள் குழுவின் பிரிதிநிதிகளுடன் வந்த ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று, இரண்டு நாள்கள் வத்திக்கானைப் பார்வையிட்ட பின்னர், திருப்பீட பல்சமய உரையாடல் அவையுடன் இணைந்து இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
பாரிசில் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது அக்குழு.
அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo வார இதழ் அலுவலகத்தின்மீது இப்புதன் நடுப்பகலில் நடத்தப்பட்ட தாக்குதலில், அவ்விதழின் ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : CNA

7. ப்ரெயில் எழுத்தில் விவிலியப் பிரதிகள்

சன.09,2015. இங்கிலாந்தை மையமாகக் கொண்ட கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று பார்வையிழந்தவர்களுக்கென ப்ரெயில் எழுத்தில் விவிலியத்தை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.
இதன் மூலம், உலகிலுள்ள 28 கோடியே 50 இலட்சம் பார்வையற்ற மக்கள் தங்களின் விசுவாசத்தை மட்டுமல்ல, தங்களின் அன்றாட வாழ்வையும் சிறப்பாக வாழ்வதற்கு உதவி வருகின்றது அந்நிறுவனம்.
இங்கிலாந்தை மையமாகக் கொண்ட United Bible கழகம், 40க்கும் மேற்பட்ட  மொழிகளில் ப்ரெயில் எழுத்தில் முழு விவிலியத்தையும், 200க்கு மேற்பட்ட  மொழிகளில் விவிலியத்தின் ஒரு பகுதியையும் மொழி பெயர்த்து விநியோகித்து வருகின்றது. இவ்விவிலியக் கழகம் வழியாக 50 நாடுகளில் ப்ரெயில் விவிலிய மறைப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
சாதாரண எழுத்தில் ஒரு விவிலியத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவைவிட ப்ரெயில் எழுத்தில் அச்சிடுவதற்கு ஆகும் செலவு 50 மடங்கு அதிகம் என்றும், ப்ரெயில் எழுத்தில் முழு விவிலியத்தையும் அச்சிடுவதற்கு ஏறக்குறைய 600 டாலர் செலவாகின்றது என்றும் இவ்விவிலியக் கழகம் கூறுகின்றது. 
மற்ற மொழிகளில் விவிலியத்தை அச்சடித்து 200க்கு மேற்பட்ட நாடுகளில் United Bible கழகங்கள் விநியோகித்து வருகின்றன.

ஆதாரம் : CNA

8. உலகில் இன்னும் 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர்

சன.09,2015. சிறார் தொழில்முறை உலகில் தடைசெய்யப்பட்டிருக்கின்றபோதிலும், உலகில் இன்னும் 5 வயதுக்கும் 15 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர், இவர்களில் பெரும்பான்மையினர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர் என்று உலக தொழில் நிறுவனம் கூறியது.
ஹொண்டூராஸ் நாட்டில் 5 இலட்சம் சிறார் வேலை செய்கின்றனர் என்றும், இவர்கள் அந்நாட்டின் இளையோர் எண்ணிக்கையில் ஏறக்குறைய 15 விழுக்காடு என்றும் அந்நாட்டின் தேசிய கணக்கெடுப்பு கூறுகிறது.
ஹொண்டூராஸ் நாட்டின் Tegucigalpa நகரின் குப்பை மேடுகளில் பல சிறார் சாக்குகளில் பொருள்களை நிரப்புவதைக் காண முடிகின்றது என்றும், மற்ற சிறார் போதைப்பொருள்களை விற்று குற்றக் கும்பல்களுக்குப் பணம் கொடுக்கின்றனர் என்றும் 
அக்கணக்கெடுப்பு கூறுகிறது.
ஹொண்டூராஸ் நாட்டில் சட்டமுறையான குறைந்த மாத ஊதியமான 380 டாலரைவிடக் குறைவாகவே சிறார் தொழிலாளர் பெறுகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
     
ஆதாரம் : AP

Thursday, 8 January 2015

Catholic Tamil News - 08.01.15

Catholic Tamil News - 08.01.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்

2. பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது

3. திருத்தந்தை - அன்பு இறைவனிடம் இட்டுச் செல்கின்றது

4. எபோலா நோயாளிகளுக்கு தலத்திருஅவைகள் ஆற்றும் சேவைக்குப் பாராட்டு

5. திருத்தந்தையின் 2வது ஆசியத் திருத்தூதுப் பயணம், அவர் ஆசியா மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது

6. இலங்கை செல்லும் கோவா திருப்பயணிகளுக்கு அரசு உதவி

7. 2ம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன்,இரஷ்யர்கள் இணைந்து கிறிஸ்மஸ்

8. மருத்துவத்தில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்

சன.08,2015. மனிதர்களிடம் இவ்வளவு வன்முறை உணர்வுகள் உள்ளனவே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.
சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியின்போது, இப்புதனன்று பாரிஸ் மாநகரில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட கொடுமையைக் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இந்த வன்முறையால் கொல்லப்பட்டவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தன் செபங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது முகமூடி அணிந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இப்புதன் நடுப்பகலில் நடத்திய தாக்குதலில், ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமுற்று மரணத்தோடு போராடி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது

சன.08,2015. பாரிஸ் நகருக்காகச் செபிக்குமாறு, இவ்வியாழன் காலையில் தனது டுவிட்டரில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், பாரிஸ் நகரில் இப்புதன் நடுப்பகல் வேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய இப்படுகொலையைக் கண்டித்து, பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கு, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வன்முறை, அமைதியை விரும்பும் அனைத்து மனிதர்களின் மனங்களையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது எனவும், இதில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் மனத்தளவில் ஒன்றித்துச் செபிக்கும் உலகத்தினர் அனைவரோடும் தானும் இணைந்து செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
மனித உயிரை மதிக்க மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்கு, நல்மனம் கொண்டோர் இணைந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் திருத்தந்தை தனது செய்தியில் விடுத்துள்ளார்.
இத்தந்திச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
மேலும், பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களும், இத்தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று கூறி, சமுதாயத்தில் ஒருவர் ஒருவரை மதித்து அமைதியில் வாழும் உறவுகளைக் கட்டியெழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை - அன்பு இறைவனிடம் இட்டுச் செல்கின்றது

சன.08,2015. கிறிஸ்தவ அன்பு, வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது, மாறாக அவ்வன்பு செயல்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இறைவன் அன்பு நிறைந்த பாதையில் வழிநடத்துகிறார் மற்றும் அன்பின் வழியாக நாம் இறைவனை அறிகிறோம் என்றும் கூறினார்.
இவ்வாண்டின் இக்காலத்தில் திருவழிபாட்டில் இடம்பெறும் முக்கிய வார்த்தையாகிய வெளிப்படுத்துதல் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, மூன்று கீழ்த்திசை ஞானிகளுக்குத் திருகாட்சியில், திருமுழுக்கில், கானாவூர் திருமணத்தில் இயேசு தம்மை வெளிப்படுத்தினார் என்று கூறி, நாம் எப்படி இறைவனை அறிய முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இறைவனே அன்பு, அன்பின் பாதையில் இறைவனை நாம் அறிய வருகிறோம், அன்பை அறியாதபோது நாம் எப்படி அன்புகூர முடியும் என்றும் கேட்டுள்ள திருத்தந்தை, அன்பு கடவுளிடமிருந்து வருவதால் நாம் ஒருவர் ஒருவரை அன்புகூர வேண்டுமென்றும் கூறினார்.
கடவுளின் அன்பு எப்போதும் நமக்காகக் காத்திருக்கின்றது, அவ்வன்பு எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது, நம்மை மிகவும் அன்புகூரும் நம் வானகத்தந்தை நம்மை மன்னிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார், இதனை உணருவதற்கு வரங்களை இறைஞ்சுவோம் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. எபோலா நோயாளிகளுக்கு தலத்திருஅவைகள் ஆற்றும் சேவைக்குப் பாராட்டு

சன.08,2015. எபோலா உயிர்க்கொல்லி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய நாடுகளின் கத்தோலிக்கத் தலத்திருஅவைகள் இந்நோய் நெருக்கடிகளுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவையைப் பாராட்டியுள்ளது திருப்பீடம்.
இந்த மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயாளிகள் மத்தியில் தலத்திருஅவைகள் ஆற்றிவரும் பணிகளை மேலும் ஊக்குவித்து உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.
எபோலா நோய்ப் பாதிப்பால் கடுமையாய்த் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டும் விதமாக, தனியாகவோ, குழுவாகவோ நிதி உதவி வழங்கப்படுவதையும் ஊக்குவித்துள்ளது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.
இந்தப் பாராட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, கத்தோலிக்கத் தலத்திருஅவை இந்நோயாளிகள் மத்தியில் ஆற்றிவரும் துணிச்சலான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் நிதி உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளது. 
2013ம் ஆண்டில் எபோலா நோய்த் தாக்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை 7,905 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தையின் 2வது ஆசியத் திருத்தூதுப் பயணம், அவர் ஆசியா மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது

சன.08,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவுக்கு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப் பயணம், அவர் இந்தப் பெரிய கண்டத்தின்மீது கொண்டிருக்கும் அக்கறையையே காட்டுகின்றது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சனவரி 12, வருகிற திங்கள் இரவு 7 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கும் அவரின் இரண்டாவது ஆசியத் திருத்தூதுப் பயணம் பற்றி பத்திரிகையாளரிடம் விளக்கிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆகஸ்டில் தென் கொரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, மீண்டும் ஆசியாவுக்குச் செல்லவிருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய  அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் ஆசியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாமல் போனதால், ஒரு திருத்தந்தையின் பிரசன்னம் ஆசியாவுக்குத் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தப் பயணம் அமைந்துள்ளது என்று கூறினார்.
சனவரி 13, வருகிற செவ்வாயன்று இலங்கையின் கொழும்புவில் தனது இந்த இரண்டாவது ஆசியத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ். இலங்கையில் 48 மணி நேரப் பயண நிகழ்வுகளை நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15ம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு கொழும்புவிலிருந்து பிலிப்பீன்ஸ்க்குப் புறப்படுவார். அன்று மாலை 5.45 மணிக்கு மனிலா சென்றடையும் திருத்தந்தை, அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து 19ம் தேதி மாலை 5.40 மணிக்கு உரோம் வந்தடைவார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இலங்கை செல்லும் கோவா திருப்பயணிகளுக்கு அரசு உதவி

சன.08,2015. முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இலங்கை செல்லும் 500 கோவா கத்தோலிக்கர்களுக்கு பயணச் செலவுகளை ஏற்பதாக கோவா அரசு அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 14, வருகிற புதனன்று கொழும்புவில் முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவிக்கும் திருப்பலியில் கலந்துகொள்வதற்கு கோவாவிலிருந்து செல்லும் திருப்பயணிகளுக்கு கோவா மாநில அரசு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இப்புதனன்று கோவா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு நான்கு நாள் திருப்பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகளின் விமானக் கட்டணத்தில் பாதியை அரசு ஏற்கிறது.
மேலும், இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு இருவரே, அதிலும் ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களே அரசின் இச்சலுகையைப் பெறுவார்கள்.
1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கோவாவில் பிறந்த ஜோசப் வாஸ் அவர்கள், 1686ம் ஆண்டில் இலங்கை சென்று கத்தோலிக்கத்தைப் பரப்பினார்.
கோவாவின் ஒரு கோடியே 50 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : UCAN         

7. 2ம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன்-இரஷ்யர்கள் இணைந்து கிறிஸ்மஸ்

சன.08,2015. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன் மற்றும் இரஷ்ய கிறிஸ்தவர்கள் இணைந்து கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்தனர் என்று உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்கப் பேராயர் Sviatoslav Shevchuk கூறினார்.
உக்ரேய்ன் நாட்டில் போர்ச்சூழல் நிலவி வருவதற்கு மத்தியிலும், Donbass மாநிலத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்ததாகக் கூறிய Kyiv-Halych பேராயர் Shevchuk அவர்கள், உக்ரேய்னில் அமைதி நிலவுமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
பொதுவான கருத்து வாக்கெடுப்புகளில் மட்டுமல்லாமல், தங்களின் அன்றாட வாழ்விலும் விசுவாசிகள் தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்திற்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார் பேராயர் Shevchuk.
இரஷ்ய அர்த்தடாக்ஸ் சபை சனவரி 7ம் தேதியன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது

ஆதாரம் : AsiaNews               

8. மருத்துவத்தில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

சன.08,2015. நீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதியவகை ஆண்டிபயாடிக் மருந்து ஒன்றை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நுண்கிருமிகளை வளர்ப்பதில் அமெரிக்க அறிவியலாளர்கள் கடைப்பிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கின்றன. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து மிகவும் நம்பிக்கையளிப்பதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு, மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதியவகை ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.
1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை எந்தப் புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

ஆதாரம் : BBC                          

Diocese of Leshan- China

Diocese of Leshan- China


In a land area of approximately 163,905 square kilometers, the diocesan territory covers Leshan, Emeishan and Ya'an cities, Ngawa Tibetan and Qiang Autonomous Prefecture, and Garzi Autonomous Prefecture, accounting for nearly half of Sichuan province.

Population

There are about 6,789,000 people in the three cities and two autonomous prefectures that Leshan diocese covers. They comprise of Han, Qiang, Tibetan, Yi and other ethnic minorities.

Language

Mandarin Chinese and dialects of Leshan, Emei, Jiajiang, Jianan and Zigong are in use in the territory.

History

Catholicism was introduced to Leshan and its neighboring mountainous region several centuries ago by French missioners.

Leshan diocese was formerly Prefecture Apostolic of Yachow, which was erected in 1929. It was elevated to Vicariate Apostolic in 1933 and was renamed Kiating in 1938. It became a diocese in 1946 when the Church Hierarchy was established in China.

Today, it is one of the five dioceses in Sichucan province with 16 priests, 11 Religious sisters, about 60,000 Catholics and 44 churches. 

Transportation

There is a passenger rail line that serves the Mianyang-Chengdu-Leshan inter-city area. The Chengdu-Leshan Highway with a total length of 160 kilometers, was finished on Jan. 14, 2000. This highway has since become very important to the city's development.

Leshan city locates at 100 kilometers from the Shuangliu International Airport of Chengdu. Meanwhile, the sea route Leshan-Yibing-Luzhou-Chongqing is very convenient for traveling by water.

Climate

Leshan has a monsoon-influenced humid subtropical climate and is largely mild and humid. Winter is short, mild and dry, with a January average of 7.1°C, and while frost may occur, snow is rare. Summers are long, hot and humid, with highs often exceeding 30°C, yet extended heat waves are rare. The daily average in July and August is around 26°C. Rainfall is light in winter and can be heavy in summer, and more than 70 percent of the annual total occurs from June to September.

Economy

Leshan is rich in forest and water energy resources. Mineral deposits include rock salt, bittern, limestone, and saltpeter. Machinery, power, salt chemicals, construction material, and food processing are the main industries of Leshan. Leshan is a major producer of salt and a lager hydropower base in the southwest of China.The Gongzui hydropower station on the Dadu River is a regional power grid. The chief farm products include rice, rape, oranges, tea, silkworm cocoons, and pigs.

Topography

Leshan is a prefecture-level city located at about 120 kilometers from the provincial Chengdu at the confluence of the Dadu and Min rivers in Sichuan province. It is close to the mountain region of the southwest and lies along the alluvial plains of a number of rivers which include the Min, Jinsha, Qingyi, and Yangzi.

Education

There are 1,169 kindergartens, primary and secondary schools with a total of 527,000 students in Leshan. Tertiary education institutions include the Leshan Normal University, the Emei campus of the Southwest Jiaotong University and the Engineering Technical College of Chengdu University of Technology.

Culture

Leshan is a historical city. In ancient times it was known as Jiazhou and was reputed as the place "Where there is the most beautiful landscape in all Sichuan, there is Jiazhou." It was famous for its abundance of the Chinese flowering crab-apple and long ago was given the title of "Haitang (crab-apple) Xiangguo (fragrant city)." Nowadays Leshan is particularly well known as a city of National Key Tourist Attractions due to its natural landscape and wealth of cultural relics.

Leshan is a renowned tourist resort as it boasts some famous sites of Buddhist pilgrimages and great natural beauty which are found nearby including: Leshan's Giant Buddha, Mount Emei, the Sansu Hall of Northern Song dynasty, etc. In 1996, the Mount Emei Scenic Area, including the Giant Buddha, the largest stone-carved buddha in the world, was declared a World Heritage Site by UNESCO. Mount Emei is located within the county-level city of Emeishan, which is under the administrative jurisdiction of Leshan.

Leshan has five museums, 10 public libraries, a radio station and a TV station. The coverage of radio and TV broadcasts is about 98 percent of the local population.

The Giant Buddha is a famous tourist spot near Leshan city. It was carved out of a cliff face during the Tang Dynasty (618-907AD)

Mount Emei is one of the Four Sacred Buddhist mountains in China

Spirituality and Poverty

Spirituality and Poverty

Spirituality and Poverty thumbnail
Gustavo Gutiérrez O.P.
Many people of the world live in real, material poverty and social insignificance; their situation is not simply a matter of economics. Poverty is a complex reality with many different players; in the frame of theological reflection in Latin America and the Caribbean we talk about the social insignificance and marginalization and unrecognized basic human rights as well. A person can be insignificant because of economics, race, gender, culture, ethnicity, or other reasons.
Poverty is also a condition that has numerous human causes: social structures and mental categories. Solidarity with the poor is not limited to direct assistance to the poor; it must also manifest a commitment to eliminate the root causes of poverty. This perspective was slow to make its way into the social magisterium of the Catholic Church, but it has been evident in the past few decades.
The ultimate instance of real poverty and disrespect of the human dignity of every person made in the image of God is early death; it is prevalent and unjust, and it represents a serious challenge. Archbishop Oscar Romero denounced this situation, which Medellin and Puebla called ‘inhumane’ and ‘against the Gospel,’ and for this he was accused of advocating social conflict. This solidarity with the poor requires a denunciation of the condition in which they live, as well as its causes.
Spiritual poverty and a commitment to alleviating real poverty are profoundly related and cannot be separated. Out of spiritual poverty — a condition of the disciples who dedicate their lives to service of the kingdom and a search for God’s will — is the attitude of detachment, or freedom from the material goods of the world, for the true disciples realize that where one’s treasure resides is also where the heart abides (Matt. 6:21). Spiritual poverty calls us ‘to be poor,’ Romero said, ‘and become involved in the poverty of our people as if they were our own family.’
Voluntary poverty is a way of life. Spiritual poverty and voluntary poverty are united in the expression ‘preferential option for the poor.’ The word ‘preferential’ has, as one of its primary sources, the phrase of John XXIII: ‘the church for everyone and in particular the poor.’ ‘Preferential’ reminds us that God loves all people, but his first love is the forgotten and oppressed, the poor. Universality and preference are both present in the Christian message. The phrase ‘preferential’ is new, but its content is very old and requires simply opening the Bible to find it. Karl Barth, a good Gospel reader, said: ‘God always favors the poor and [is] against the rich.’
If it is preferential, it is not, by definition, exclusive. Preference and universality are in tension, not in contradiction, as prayer and action are not contradictory, but are in tension. The preferential option says that ‘the poor are first.’ ‘Priority’ or ‘privileged’ could be substituted for ‘preferential.’ They are similar expressions. Most important is not to lose sight of either the universality of God’s love nor that the weakest and insignificant come first. To live these two poverties implies a conversion. Each Christian, and the whole church, must convert.
A church for the poor is a church that makes its own the practice of Jesus, that makes memory of him in the Eucharist and service, that communicates through the languages of gratuity and justice, prophecy and mysticism, and that lives spiritual poverty and a commitment to the poor, two basic conditions so that the testimony we give of the coming of the kingdom is authentic.

From “Close to God, Close to the Poor” Paginas  (2010)

Can Pope Francis bring a message of peace to a violent land?

Can Pope Francis bring a message of peace to a violent land?

Contentious election and a long history of oppression pose serious threats to this month's apostolic visit
<p>(Picture: <a href="http://www.shutterstock.com/gallery-1613585p1.html?cr=00&pl=edit-00">giulio napolitano</a> / <a href="http://www.shutterstock.com/editorial?cr=00&pl=edit-00">Shutterstock.com</a>)</p>
A little more than a month ago, I made an appeal to Pope Francis not to visit Sri Lanka on a planned Apostolic visit that will begin on January 13 — principally on the grounds that a presidential election was not a suitable moment for such a trip.
Election-related violence has intensified since I made that written appeal. On Wednesday, I heard that a person who was shot while erecting a stage for an opposition party rally succumbed to his injuries. Also that day, three colleagues received death threats over the phone.
Earlier this week, someone deposited the severed heads of dogs in front of two of these colleagues’ homes. The wife of disappeared journalist Prageeth Ekneligoda received threats of violence if she did not cancel a vigil to remember his disappearance.
These are just the most recent acts and threats of violence.
Let’s go back three decades. Wednesday marked the 30-year anniversary of the killing of Fr Mary Bastian inside the Vankalei Church premises in front of witnesses. Like many other such victims, his body was never found and nobody has been held accountable for his death.
It is in this present and past context that Cardinal Malcolm Ranjith, the archbishop of Colombo, has asked Catholics to have faith in the promises of the two main presidential candidates in Thursday’s election that their supporters will not engage in any violence before or after the elections.
These assurances of a peaceful poll sound hollow to friends and colleagues who are even now suffering intimidation and violence. Indeed, they fear the incumbent, President Mahinda Rajapaksa, will refuse to step down in the event that he loses the election, leading to reprisals against the supporters of his rivals.
Cardinal Ranjith has not condemned this week’s violence and threats, nor has he reached out to any of the victims. And yet, he has been quoted in the local media as saying, “If there is a possible threat of violence or if the existing circumstances at the time point to a violent environment for the papal visit, then we will have to take the necessary steps”.
With all due respect, Cardinal Ranjith, the threats are more than possible. They are real. The environment is already violent.
It is my hope that even at this late hour Pope Francis will forego his visit to Sri Lanka, regardless of who wins the election. Furthermore, it is the hope of many that the dignity and sanctity of life of the Sri Lankan people — central to any post-democratization agenda — will be given at least some consideration alongside the financial and logistical arrangements of those who take credit for inviting the pope to visit Sri Lanka.
Let us assume that the pope will not cancel his visit. How will it be meaningful to Sri Lanka?
Its main focus appears to be the canonization of Blessed Joseph Vaz. I must say that more than 300 years after his death and 20 years after his beatification, I see no reason why we can’t wait a few more months or years.
But if we cannot wait, then it would be worth noting the deeper significance of Vaz’s canonization. First, he was courageous in the face of adversity. Second, he used creativity to overcome the many obstacles put in front of him. Finally, he was profoundly humble.
Sri Lankan Catholics would do well to emulate these three attributes in the midst of violence that has occurred and violence that is imminent. They are essential for bearing Christian witness in the country and particularly in working towards justice and human rights.
Last year, Pope Francis gave us a fresh perspective on canonizations. He was reported to have said that he wanted theologians to study whether those who were killed because of their actions doing God’s work could also be considered martyrs.
“What I would like is that they clarify when there's a martyrdom for doing the work for the other that Jesus commands". This was said in the context of Pope Francis “unblocking” and expediting the process for beatification and eventual canonization of Archbishop Oscar Romero of El Salvadore, who had been killed for his outspoken condemnation of the dictatorship and it’s supporters.
"For me Romero is a man of God. There are no doctrinal problems and it is very important that [the beatification] is done quickly," Pope Francis is reported to have said.
These Papal words are relevant to Sri Lanka, a country where a Catholic priest disappeared in May 2009 for writing an appeal to the then Pope Benedict XVI to save innocent civilians from being massacred. Fr Francis, an elderly Tamil priest who had opted to remain in the war zone with his people, wrote that letter amidst falling shells and bombs, and told Pope Benedict that the government could kill him for writing such a letter.
Sadly, his fear seems to have been fulfilled. Fr Francis was seen by hundreds of people surrendering to the army but was never seen afterwards. Submissions in courts and to commissions of inquiries have yielded nothing. Will Pope Francis remember Fr Francis during his visit to Sri Lanka?
I hope the canonization will be an opportunity to reflect on modern-day Catholic martyrs in Sri Lanka. Another Tamil priest, Fr Jim Brown, disappeared after having been threatened by a naval officer. This was days after he had taken the lead to save many lives and get medical treatment for civilians injured during the fighting in 2006.
Two other Tamil Catholic priests involved in human rights and humanitarian work, Fr Karunaratnam (Fr Killi) and Fr Pakiaranjith, were also killed in 2008 and 2007, respectively. From the 1980s, Sinhalese and Tamil priests who have been at the forefront of raising their voices on behalf of the oppressed and supporting struggles for justice have been killed or disappeared in Sri Lanka.
Government officials have discredited and intimidated Bishop Rayappu Joseph of Mannar for speaking out on human rights violations, and there have been calls for his arrest. He has been subjected to interrogations on at least two occasions. Along with other Catholic clergy and lay persons, many independent journalists and human rights activists have been killed, disappeared, attacked, threatened, intimidated, harassed, restricted and discredited with false allegations.
I have experienced this type of repression personally on many occasions. Last year, a Tamil Catholic priest and I were arrested and detained under terrorism charges when we tried to meet families of those detained, which we consider our Christian duty. We are still subjected to investigations, travel and speaking restrictions, and our phones and bank accounts are being scrutinized.
Christians and Muslims have been under severe attack by those claiming to be Buddhist groups. A Buddhist monk who has publicly stood for freedom of religious minorities and inter-religious harmony has been attacked several times, jailed and forced into hiding. Private and state land has been acquired, often illegally, for military and touristic purposes. A traditional Tamil Catholic village, where the Church also owns land, is now a naval camp.
The military continues to stop or interfere in religious and civil events in the North. Militarization is spreading all over the country, including in education, sports, tourist resorts, airlines, boat services, shops, restaurants and farms.
A major challenge for Pope Francis will be to overcome bureaucratic and ceremonial niceties to reach out to the oppressed, such as families of those disappeared or killed, and to visit political prisoners, those who have been evicted from their lands, tortured and subjected to sexual abuse.
But reaching out to the oppressed does not seem to be the focus for the Colombo Catholic hierarchy organizing the papal visit. Perhaps such matters are considered “political” and not matters that are central to Catholic teachings? Or perhaps what Jesus did during his ministry, and what Pope Francis seeks to emulate — namely, serving the poor and downtrodden — has been forgotten?
The preparation for the visit appears to be spirituality disconnected from socio-political-economic realities and concerns of the poor and the oppressed. The newly opened Catholic Bookshop in Colombo is selling Pope Francis souvenirs, but when I asked to purchase some booklets containing what Pope Francis has been doing and saying, including his encyclicals, I was told that none were available.
On a more hopeful note, during a recent visit to the North I heard about special efforts to ensure the pope has at least some time to interact with people affected by the civil war when he visits the Madhu shrine. However, he will have only one hour in the 48 hours he will spend in the country to see them.
If Pope Francis does arrive as expected on January 13, I wonder what he will say and do. What will he pray for and what will he say to our government officials? How will he show his solidarity with the poor and oppressed? How will he instill hope in a more democratic, just and loving Sri Lanka?
Ruki Fernando as an adviser with the Inform Human Rights Documentation Center.

ROBERT JOHN KENNEDY: குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதை ...

ROBERT JOHN KENNEDY: குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதை ...: குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதை சுப்பிரமணியத்தின்யின் பலே கண்டுபிடிப்பு....! “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆ...

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...